Wednesday, September 30, 2009

நாம் கடந்து சென்ற வீதிகளில் விலைமாது ராட்சியம்?


நாம் அறியா பக்கங்கள்?
பகலில் வர்தகநகரமாகவும் இரவில் வறியவர்கள்,விலைமாதுகளின் புகலிடமாகும் விளங்கும் பெற்றா என்று அழைக்கப்படும் புறக்கோட்டை.
என்னை அதிரவைத்த உன்னை சம்பவம்.
உங்களை பார்வைக்கு.
தொடர் வாதங்களுக்கு பிறகு சொந்த பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

நாம் பகலில் நடந்து சென்ற இடங்களா என்று வியக்கும் அளவுக்கு அவை வறியவர்களின் வதிவிடங்களாகவும் விலைமாதுகளின் படுக்கை அறைகளாக மாறியிருப்பது அதிரவைத்தது.

பகலில் மக்கள் அலைவெள்ளத்தால் நிரம்பியிருகும் புறக்கோட்டை வீதி கடைகள் இரவில் விலைமாதுகள் பரிமாறும் இடமாக காணப்படுகிறதே?
எமது நாடு எவ்வளவு ஆபாச வலைதளங்களை தடை செய்தாலும் சுதந்திரமாக நடக்கும் இதுபோன்ற தவறுகளை தடுக்க என்ன வழிசெய்யப்போகிறது?
காமம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்றுதான்.
ஆனால் இதுபோன்ற தவறான காமம் தண்டிக்கப்பட வேண்டியதே?
உலகில் உள்ள சில நாடுகள் சட்ட ரீதிதியாக பாலியல்தொழிலை நடத்த அனுமதி வழங்கிஉள்ளன.ஆனால் எமது நாட்டில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஒரு விடயத்தை நாம் பார்க்கும் போது,அனுமதி வழங்கப்பட்ட நாடுகளுன் ஒப்பிடும் போது எமது நாட்டில் கற்பழிப்பு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.
இதற்கு தகுந்த தீர்வு காண்பது அரசாங்கத்தின் கைகளில்தான்?
வறியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் செல்லுகிறது.
அதிலும் சிறுவர்கள் தொகை அதிகம்.
காலத்தின் கைகளில் இதைவிட்டு விடை பெறுகிறேன். ஒவ்வெரு வாரத்திலும் எமது சமூகம் சம்மந்தப்பட்ட விடயங்களை எழுத தீர்மானித்து உள்ளேன்.

எனது அடுத்த பதிப்பாக லண்டன் வரை சென்ற நண்டுக்கறி
சுவாரசியம் மிகுந்த உண்மை சம்பவம்?


Tuesday, September 29, 2009

மீண்டும் துளிர்விடும் எனது வாதம் பதிவர் கோபிக்கு பாகம்- 2

கோபி அவரின் பதிவிற்கு நான் பதில் அளிக்க மாட்டான் என்று நினைத்து சிலர் எனக்கு கமெண்ட்ஸ் அடித்து இருந்தனர்.
எனது மறுமொழிகளுடன் மீண்டும் துளிர்விடுகிறேன்
உண்மைகள் சாவதில்லை எழுத்தாழன் அழிவதில்லை.உண்மையை வாதத்தால் பொய்யாக மாற்றும் காலம் இது.
உதாரணம் கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா வாதம்.
கருத்துகள் ஆதாரம் சரியாய் அமையும் இடத்து யார் வேணாலும் வரலாம் இல்லையா?

முதலில் என்னை நான் பிரபல்யப்படுத்துவத்தாக கூறுகிறார் கோபி. அதற்கு விளக்கம் தர விரும்பிகிறேன்
பிரபல்யம் தேட நினைதால் சிலர் அடித்த தவறான காமண்டை நான் ஆதரித்து எழுதியிருக்கலாமே? நான் எனது ஆனது தனிப்பட்ட கருத்தை சூழல தான் பதிவு இடுகிறேன்?
இதால் நான் எஅந்து வேறு பதிவிக்கு செல்லாது இதை பற்றிஜே எனது தொடர் பதிவுகள் வெளிவந்துகொண்டுஇருக்கிறது இது எஅனகு நானே செய்த பிரபல்யம் அல்ல நண்பறே பிறகு இதற்கும் சொல்லுவீர் உம்மை பயன்படுத்தி நான்பிரபல்யம் தேடுவதாக.

மறுமொழிகள்
//என்னை மொக்கைப் பதிவர் என்று சொல்லுமளவிற்கு உமக்கு எந்தத் தகுதியும் கீடையாது//

//கோபிக்கு//
எனக்கு தகுதிகிடையாது என்றுசொல்லும் அளவுக்கு உமது மதிப்பு பொருந்திய தகுதியை அறியவிரும்பிகிறேன்?
எனக்கு என்ன கீடயாது என்ற வார்த்தை புரியவில்லை.என்ன இது மொக்கை வார்த்தையா? தயவு செய்து எனக்கு சொல்லி தரவும் அறிய ஆவலாய் உள்ளேன்

//மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளை முதலில் மதிக்கப் பழகும்//

//கோபிக்கு//
பகவான் உமது பார்வையில் ஓர் தனி மனிதர் எனவே அவரை ஆதாரம் இல்லாமல் சாடும் உமக்கு எங்கே சென்றது அறிவு?
தலை வலியும் தனக்கு வந்தால் தான் புரியும்
ஒரு கொலை செய்த ஒருவனை கூட சரியான ஆதாரம் இன்றி அவனை நீதிமன்றத்தில் கூட எதிர் தரப்புவாதி கொலைகாரன் என கூறி வாதிடமுடியது அவ்வாறு இருக்க நீர் உமது சொந்த ஆதாரம் அற்ற தவறான கருத்தை பலர் பார்வைக்கு விடாது தவறு இல்லையா?
இது தனி மனிதஉரிமை மீறல் இல்லையா?
அவரை வழிபடுவது அவரது பக்தர்களின் தனிப்பட்ட உரிமை அதில் ஆதாரம் அற்ற பதிவை இடும் உம்போன்ற மொக்கை பதிவர்கள் தலையிட உரிமை இல்லை?
முதலில் உமது சித்தி அதாவது இந்தியா சென்று பகவானை சந்திக்க உள்ளார் அவரை திருத்தும் பிறகு வெளியில் நடக்கும் விடயத்தை பார்ப்போம்
தலை வலியும் தனக்கு வந்தால் தான் புரியும்

//hits இற்காக எழுதுபவன் அல்லன் நான்//

எனக்கு தெரிந்தவரை நீர் எனக்கு இத்தனை கிட்ஸ் வந்துஉள்ளது எமக்கு
கூறியது கிடையாத?
சரிவிடும் அவரு இல்லை என்றால் ஹிட்ஸ் கவுண்டரை அகற்றிவிடும்
கோபிக்கு

//அப்போது எட்டு வயதக் குழந்தையிடம் ஆபாசப் படமொன்றை கொடுத்தால் அது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்காதா?//

கோபிக்கு
ஆபாசப் படம் கொடுப்பது சரியா தவறா என்ற விவாதம் இங்கு நடக்கவில்லை தானே கோபி?
நீர் நல்லா கருத்தை திசை திருப்ப பார்க்கிறீர்.

// பெற்றோர்கள் பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு முன்னால் வைத்து சண்டை பிடிப்பதில்லை//

கோபிக்கு
உமது பாணியில் சொல்ல போனால் அதாவது வானிலை அறிக்கை போல் இன்று இரவு தந்தையான............. இவருக்கும் தாயான...........இவருக்கும் சாமிஅறையில் சண்டைபிடிப்போம் என முடிவெடுத்து விட்டு சண்டை பிடிப்பது போல் சொல்லுகிறீர்.
நல்லா மொக்கை போம்

//முழுமுதற் கடவுள் சிவபெருமான் தானே? உங்கள் எத்தனை பேரின் வீடுகளில் சிவபெருமானின் படம் இருக்கிறது அல்லது பெரிதாக இருக்கிறது?

கோபிக்கு
சொல்லவே இல்ல இதை உமக்கு யார் சொன்னா?

கோபி நீர் அக்காலத்தில் இருந்தே வசித்து வருகிறீர்தானே
இல்லை உமக்கு எதாவது சக்தி வந்து கண்டு பிடித்தீறா.
இதை எவ்வாறு நம்புவீர்?

//ஆனால் அடித்தட்டு மக்கள், படிப்பறிவில்லாத மக்கள் கடவுள் என்று ஏற்றுக் கொண்ட ஒருவரை கைதுசெய்வது இலகுவானதல்ல... அதுவும் இந்தியாவில்... ஹா ஹா...//

கோபிக்கு
உம்போன்றவர்களை வைத்து மற்றவர்களை மதிப்பு இட வேண்டாம்
இன்று ஒருவர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்து நாளை அவர் கடவுள் என்று சொல்லுகிறார் என்றால் அவரை உன்போன்றவர்கள் நம்பலாம் எவ்வளவு மடைய ஆக இருந்தாலும் முடியாது?
அடை விட ஓர் நாளில் ஒருவரை நம்ப உம்போன்றவர்களா சாமானியா அல்லது படிப்பறிவு அற்ற இந்திய மக்கள்.


//ஒருவரைப் பார்க்க பணம் கட்டிச் செல்வது வேறொரு இடத்துக்குத் தான். அங்கு தான் அறைக்குள் போவதற்கு பணம். மணிக்கு இவ்வளவு என்று அறவிடுவார்கள் என தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன்//

கோபிக்கு
முதலில் நீர் ஆபாசப்படம் பார்த்து இருந்தால் அதை உன்னுடன் வைத்து கொள் அடை விட்டு விடு அந்த அறிவை இங்கே காட்ட வேண்டாம்.
சரி மதத்தை விடும் உம்மை விட வயது அதிகம். அவரை வணங்குவோறும் உள்ளனர் இந்த வார்தை அவர்களை புண்படுத்தாதா சமயம் வேண்டாம் உம்மை இவாறன நல்ல விடயங்களை கூறி வளர்கவில்லையா இவ்வாறான வாக்கியம் சரியானதா? அப்படியென்றால் இது ஏற்படுத்தும் தாக்கதை விடவா?
அதை பற்றி பணம் கட்டுபவர்களே கவலை படவில்லை நீர் ஏன் அழுகிறீர்?
ஆடு மேயுது என்று வேலி கவலை பட்ட கதையாக உள்ளது உமது கதை

இக்காலத்தில் எதற்கு பணம் இல்லை.
ஏன் கோயிலில் கூட தட்சனை கொடுத்தால்தானே முன்யுரிமை என்று நீர் எனக்கு சொனீர் தானே?

Monday, September 28, 2009

பதிவர் வந்திதேவன் அவர்களுக்கு ஒரு மடல்....

முதலில் வசியும் என்ன விடயத்தை நான் என்ன எழுதி இருகிறேன் என்று.
எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை.
அதை விட அந்த குறிப்பிட விடயம் சம்மந்தப்பட்ட அந்த பிள்ளையிடம் நான் கோபி முன்பு கேட்ட போது அது இல்லை என அது பதில் அழித்தது. அப்பொழுது கோபி அந்த பிள்ளையை அவ்விடத்தில் இருந்து போகும்படி கூறி விரட்டினார்.
அப்பொழுது என்னுடன் பதிவர் திவாகரும் இருந்தார். அதை விட்டு விட்டு அவர் தற்பொழுது எழுதிய அடுத்த பதிவும் ஆதாரம் அற்ற தவறான பதிவு என அடையாளம் காணப்பட்டதே இவர் இவ்வளவு ஆதாரம் அற்ற பதிவுகளை தொடர்ந்து இடுவதை முதலில் தட்டி கேழும் அப்புறம் எஅது தவறு சரி என்று பேசலாம். பதுவுகள் இடவந்து எவ்வளவு காலம் என்பது முக்கியம் அல்ல நீர் அதில் பெற்ற அனுபவமே முக்கியம். பதிவர்களுக்கு ஜால்ரா அடித்து என்கருத்தை வாழவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. எனது தவறோ அதை சுட்டி காட்டுவேன் என்மீது பிழை என்றால் நான் அதை ஏற்பேன்

Sunday, September 27, 2009

மொக்கை பதிவர் கோபி கவனத்திற்கு?



எனது நுறாவதுபதிவு

எனது பதிவை வித்தியாசமான முறையில் பதிய நினைத்தேன். ஆனால் அதுக்கு முன் சில பதிவுகள் என்னை ஆழமாக பாதித்தது. அதாவது ஒரு சாதாரண விடயம் அதாவது அந்த ஆசிரியர் அந்த மாணவியிடம் அந்த படத்தை கொடுத்து வணங்க சொன்னது மட்டும் தான். ஆனால் சில விடயங்கள் மிகைபடுத்தப்பட்டு இருக்கிறது.
முதலில் ஒரு விடயத்தை பலர் பார்வைக்கு விட முன் அதில் இருக்கும் கருத்தின் உண்மை அது எந்தழவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி அறியாமல் மொக்கை பதிவு இடுவது போல் இப் பதிவை இட்டுவிட்டு சென்றுவிடலாம் என பதிவர் கனககோபி நினைத்து விட்டார்.

முதலில் அவரது பதிவை ஆராய்வோம்

(1)// சிலநாட்களுக்கு முன்னர் அவளின் வகுப்பாசிரியை அவளுக்கு அம்மா பகவான் எனப்படுகின்ற ஒருவரின் படத்தை கொடுத்து அவளிடம் வைத்திருக்குமாறு கூறினாராம்//

கனம் கோபி அவர்களே திணிப்பு என்பது என்னவென்று உமக்கு புரியவில்லை என்றுதான் நினைகிறேன். ஆதாவது மத திணிப்புகள் என்பது பல்வேறு விதமாக நடைபெறலாம். திணிப்பு என்பது ஒருவரை வலுக்கட்டாயமாக ஓர் விடயத்திற்குள் தள்ளுவது. பண்டைய காலங்களில் அரசர்கள் நாடுகளை பிடித்தபோது இந்த சமயத்தை தான் கும்பிட வேண்டும் என்று என்று கட்டளை இட்டார்கள் அது மத திணிப்புக்கு ஒரு உதாரணம்.
நீர் குறிப்பிட்ட விடயம் மத திணிப்பு அல்ல என்பதை விளங்கி கொள்ளவேண்டும். அந்த ஆசிரியர் அவரை நீர் பகவனை வணங்ககாமல் விட்டீர் என்றால் தண்டனை தருவேன் என்று கூறினால் அது திணிப்பு.
அதை விட நீர் ஒரு விடயத்தில் நன்மை பெற்றால் அதை உமக்கு தெரிந்தவர்களுக்கு கூறுவது இல்லையா. அது போன்ற விடயத்தை பெரிது படுத்தி சுவாரசியத்திற்காக எழுத நினைப்பது மடமை.

(2)\\ 8வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே\\

கோபி
8வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே என்று நீர் கூறுவது உமது மொக்ககை பதிவை நினைவுகூறுகிறது. அதாவது அவருக்கு ஆசிரியர் பகவனை பற்றி விளக்கம் கொடுக்கவில்லையே?
அந்த குழந்தைக்கு 8 வயது என்று சொல்லியிருந்தீர்.
இவ்வளவு காலத்தில் அவர்களது பெற்றோர்களுக்கு இடையில் வந்த சண்டைகள்.சமூக சூழல்கள் ஏற்படுத்தாத தாக்கதைத்யா இது ஏற்படுத்தும்?

(2)\\நீங்கள் சிவபெருமானின் படத்தைக் கொடுத்துவிட்டிருந்தால் வேறுவிடயம். அந்தக் குழந்தை சைவசமயத்தை பின்பற்றுகிறது.\\

நீர் கேள்விப்பட்டு அல்லது பார்த்து இருப்பீர் தானே?
இந்துகள் இந்து முறைப்படி கும்பிடுவது தெரியாத? அல்லது மறைத்து விட்டீரா?

(3) \\காவல்துறையினரால் தேடப்பட பின்னர் இந்த கடவுள் வேடத்துள் நுழைந்தார் என்றும் அறிய முடிந்தது\\

கோபி காவல்துறையால் தேடப்பட்டால் வேறு வேடத்திகுள் புகுந்தால் விட்டு விடுவார்களா நல்ல நகைச்சுவை போம்?
ஒருவர் ஒரு நாளில் பிரபல்யம் அடைய முடியாதுதானே? அவ்வளவு காலம் காவல்துறை கொட்டாவி விட்டதா? பல வருடம் கழித்து பலரை பிடித்த இந்திய பொலிஸாரால் இது முடியாத?

(4)சிலவேளை இந்தத் தகவல்கள் முழுமையாக உண்மையாக இல்லாமல் இருக்கலாம்.

கோபி உமக்கு மொக்கை பதிவு வருகிறது என்றால் அதனுடன் நில்லும் தேவையில்லாமல் ஆதாரம் இல்லாத பதிவுகளை பதிந்து பிரபல்யம் அடைய நினைக்க வேண்டாம்.
கோபி ஒருவரை பற்றி ஆதாரம் இல்லாத விடயத்தை பலர் பார்வைக்கு விடுவது தனிமனித உரிமை மீறல் இல்லையா?
அதற்கு வந்தியதேவன் போன்ற சிலரின் பாராட்டுகள்? ஓர் மூத்த பதிவரால் இதை சுட்டி காட்டி உம்மை திருத்த முடியவில்லையா?

(5) 1990ம் ஆண்டு அல்லது அதற்கு கிட்டிய ஆண்டொன்றில் தனது ஆச்சிரமத்திற்கு வந்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அதன்பின்னரே இப்போது இருக்கும் தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார்.

கோபி அது வேறு விடயம் பெண் சன்நியாசிகளுக்கு தலை முடி
அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்பாட்டம் உட்பட முறைபாடு செயப்பட்டது.
நீர் குறிப்பிட சம்பவம் நடந்தது ௧௯௯௦ என்று சொன்னீர் அதற்குபிறகு தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் சொன்னீர் அது வரை என்ன நித்திரை கொண்டாரா?

பகவன் தங்ககோயில் திறந்தது 2008 ஏப்ரல் மாதம் ஏன் என்றால் எனது நண்பனும் சென்று இருந்தான்?
இது உமது ஆதாரம் அற்ற அலட்டல் பதிவிற்கு சிறந்த உதாரணம்.

(5) மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்து பொதிசெய்வது தான் அந்த வேலை.
அந்தப் பொதியில் நிறையப் பொருட்களை வைத்தார்கள்.
ஆனால் அத்தோடு விபூதி உட்பட சில பொருட்களையும், சில சுவாமிப் படங்களையும், சில சுலோகங்களை கொண்ட கடதாசிகளையும் வைத்தார்கள்.

சரி அவர்கள் அவ்வாறு பொதி செய்தது தவறு என்று நீர் கூறுருகின்றீர் தற்பொழுது பலரும் ஏன் நீர் இந்த மக்களுக்காக என்ன செய்தீர் உம்போன்றவர்கள் வாய் மொழியில் வீரர்கள்?

இவ்வளவு தவறான கருத்தை எழுதும் உம் போன்றவர்களால் தேவையில்லாத விடயம் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவும் என்பதை நீர் அறிய மாட்டீரா?


சரியான விடயத்தை நான் மதிப்பவன் உம்போன்றவர்களின் ஆதாரம் அற்ற பதிவை சாடுகிறேன்.

அதை தவிர பதிவர் கோபி எனது நண்பனும் கூட எனக்கும் அவருக்கும் தனிப்பட பகை எதுவும் இல்லை

Monday, September 21, 2009

பெண் ஆக திரும்பிவந்த அதிசயம்

ஆணாக பிறந்து ஆணாக வளர்ந்து ஆணாக காணாமல் போய் பெண் ஆக திரும்பிவந்த அதிசயம்





Sunday, September 20, 2009

இனிய ரமலான் வாழ்த்துக்கள்..!!!


ஒரு செயலை ஒழுங்கு பட செய்ய விழையும் ஒவ்வொருவரும் அந்த செயல் இனிதே
முடிந்த பொழுது மகிழும் அனுபவம் இந்த ஈகைத்திருநாள். பகல்
முழுவது நோன்பிருந்து மாலையில் நோன்பு முடிப்பதும், 30 நாட்களுக்கு பிறகு
நோன்பு முடிந்த கடைசிநாள் கொண்டாடும் ரம்ஜான் உன்மையில் ஒரு இனிய
அனுபவம்.

மேலும் ஏழைமுத‌ல் ப‌ண‌க்கார‌ர் வ‌ரை வித்தியாச‌மின்றி கொண்டாட‌ப்ப‌டும்
திருநாள் இது, மும்பை மாந‌க‌ரில் காலையில் டீ உட‌ன் சேர்த்து
பாவு(மைதாவில் செய்த‌ ப‌ன்)வையும் சாப்பிட்டு விட்டு வ‌ளையைல் பெட்டியை
எடுத்து கிள‌ம்பும் இஸ்மாயிலும் ச‌ரி , SUN ட்ர‌டெர்ஸ் உரிமையாள‌ர்
ந‌யீம் சேக்கும் ச‌ரி வித்தியாச‌மின்றி உட‌னிருந்து தொழுகை முடித்து
கொண்டாடும் இந்த‌ திருவிழா


மும்பையில் குழ‌ந்தைக‌ளுக்கான‌ பேன்ஸி சாமான்க‌ள் மிக‌க்குறைந்த‌
விலையில் கிடைக்கும் நான் ஒரு 500 ரூபாய்க்கு ஹார்கிளிப், ஸ்கார்ப்,
சின்ன‌ ப‌ர்ஸ் , பேன்ஸி வாட்ச், சிறிய‌ ர‌க‌ விளையாட்டு பொருட்க‌ள்
வாங்கிவைத்துகொண்டு ஈதீ தே பையா ( ப‌ரிசு பொருட்க‌ள் ம‌ற்றும் ப‌ண‌ம்
கொடுப்ப‌தை ஈதி என குழ‌ந்தைக‌ள் சொல்லும்) ஈதீ கொடுங்க‌ அண்ணா என‌ வ‌ரும்
எங்க‌ள் ப‌குதியில் வ‌சிக்கும் அத்த‌னை குழ‌ந்தைக‌ளுக்கும் கொடுத்து
அவ‌ர்க‌ளின் ம‌கிழ்ச்சி பொங்கும் முக‌த்தை பார்க்கும் போதும் ச‌ரி
அந்த‌ தேவ‌தை போல் உடை அனிந்து சிற‌கின்றி அங்கும் இங்கும் வ‌ல‌ம் வ‌ரும்
குழ‌ந்தைக‌ளை பார்க்க‌ என்றுமே இந்த‌ திருநாளாய் இருக்க‌ கூடாத‌ என‌
எண்ண‌த்தோன்றும்.


இந்த‌ புணித‌ மாத‌த்தில் இறைவ‌னால் அருள‌ப்ப‌ட்ட‌தாக‌ கூற‌ப்ப‌டும்
இஸ்லாமிய‌ ச‌கோத‌ர‌ர்க‌ளின் புனித‌ நூல் திரும‌றைக்கு மேலும் 15
பெய‌ர்க‌ள் உண்டு அவைக‌ள்


1,அல்கிதாப் = திருவேத‌ம்,
2,அல்ப‌யான் = தெளிவான‌ விள‌க்க‌ம்.
3,அல்புர்ஹான்= உறுதியான‌ அத்தாட்சி.
4,அல்புர்கான் = ந‌ன்மைதீமைக‌ளை பிரித்த‌ற்விப்ப‌து.
5,அத்திக்கு = ஞான‌ம் நிறைந்த‌து, நினைஊட்டுவ‌து,
6,அந்நூர்= பேரொளி
7,அல்ஹ்க்கு = மெய்யான‌து,
8,அல்க‌ரீம் =க‌ண்ணிய‌மான‌து,
9,அல்முபீன் தெளிவான‌து,
10,அல்ஹ‌கீம்= ஞான‌ம் மிக்க‌து,
11,அல்ஹ‌ஜீஸ் =வ‌ல்ல‌மையான‌து,
12,அல்ஹீதா = நேர்வ‌ழிகாட்டி,
13,அல்ர‌ஹ‌ம‌து = அருள்,
14,அஹ்ஷிஃபா= அரும‌ருந்து,
15,அல்ம‌வ்இற‌த்= ந‌ற்போத‌னை


உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்தும்
நண்பன் புவிராஜ்

Saturday, September 19, 2009

காலம் தான் பதில் சொல்லும்.




சில கேள்விகளுக்கு பதில் கிடையாது காலம் தான் பதில் சொல்லும்.
இதற்கு முன்பும் இதுபோன்ற ஒரு படம் வெளியானது அது பின்பு பொய் என உறுதி செய்யப்பட்டது.ஆனால் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் எம்போன்ற மக்கள் விழிப்பு அடையும்வரை அவர்கள் கடலில் முத்துதான்.

"கர்ப்பம்,காதல்,களவு,பொய்" என்பன ஒருநாள் வெளிவரும் பிரசவத்துக்காக காத்திருப்போம் 30 வருடம் பொறுக்கவில்லையா.......

Friday, September 18, 2009

என்ன கொடுமை சேர் இது....



மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென நைஜீரியாவைச் சேர்ந்த 84 வயது முதியவரொருவருக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேற்படி நபர் மனைவிகளின் எண்ணிக்கையை நான்காக குறைக்காவிட்டால், மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். அவரது மனைவிகளின் எண்ணிக்கை 86. நைஜீரியாவில் முஸ்லிம் அரசு பதவி வகிக்கிறது. இங்கு முஸ்லிம் ஆண்கள், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். ஷரியத் சட்டப்படி, நான்குக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். ஆனால், நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான நைஜெர்ரில் வசிக்கும் முகமது பெல்லோ அபுபக்கர் என்ற முன்னாள் ஆசிரியர், இது வரை 86 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு பிறந்த குழந்தைகள் 170. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது, இத்தகவலை வெளியிட்டார் அபுபக்கர். நான்கிற்கு மேற்பட்ட மனைவிகளுடன் வசிப்பது குற்றம் என்று குர் ஆனில் கூறவில்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியானதையடுத்து நடவடிக்கையில் இறங்கினர் அதிகாரிகள். இவ்வழக்கை விசாரித்த நைஜீரிய இஸ்லாமிய விவகார உயர் நீதிமன்றம் அபுபக்கரின் பேச்சை கடுமையாக கண்டித்தது. மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று, அபுபக்கரை எச்சரித்துள்ளது.

Thursday, September 17, 2009

முதன் முறையாக உங்கள் பார்வைக்கு....

உங்கள் பார்வைக்கு முதன் முறையாக கமல் நடிப்பில் உருவாகும் உனைபோல் ஒருவன் திரைப்பட பாடல் உங்கள் பார்வைக்கு



நான் ரசித்தவற்றை நீங்களும் ரசிக்க தருகிறேன்

இவரையும் விட்டு வைய்க்காத இலங்கை சிங்கங்கள்...


பிரித்தானிய நடிகர் மிஸ்டர் பீனின் கடன்அட்டையிலும் மோசடி: இலங்கையர் இருவர் கைது
பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இணையத் தளத்தைப் பயன்படுத்தியே இந்த மோசடியை மேற்கொள்ள இவர்கள் முயன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக தெரிவித்தார்.

ஏச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த இருவரையும் கைது செய்திருந்தனர்.

அத்துடன் பிரித்தானியாவில் உள்ள தமது நண்பர்கள் மூலமாகவே இவர்கள் இருவரும் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மலையகப் பகுதியில் உள்ள ஒரு இணையத்தள ஸ்தாபனத்திலிருந்தே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அறியக்கிடைக்கிறது.

Wednesday, September 16, 2009

பரீட்சையை நெருங்குவதை கண்டு பயமா ????


அன்பார்ந்த நண்பர்களே...
பரீட்சையை நெருங்குவதை கண்டு பயமா ????
கவலையை விடுங்கள்.....
உங்களுகேன்றே உருவார்க்ப்பட்டு இருக்கும் இந்த GROUP இல் இணைவதன்
மூலம் நீங்களும் பரீட்சையில் நூற்றுக்கு நூறு MARKS வாங்க முடியும்.

பரீட்சையில் படித்து PASS பண்ணுபவர்களை விடவும் Bit அடித்து PASS
பண்ணுபவர்களே அதிகம் என்பதை அனைவர்களும் அறிவார்கள்.

Bit அட்டிப்பதில் பல வருட அனுபவம் மிக்கவர்கள் தங்களுடைய திறமைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இங்கு ஆவலாக உள்ளார்கள்.

அன்பார்ந்த அங்கத்தவர்களே.....
நீங்களும் உங்களுடைய சுவையான அனுபவங்களை இங்கு பதிர்ந்து கொள்ளுங்கள்.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
(`'•.¸ (`'•.¸(`'•.¸(`'•.¸*¤* ¸.•'´) ¸.•'´)¸.•'´)¸.•'´)♥ ♥
♥***♥♥♥Let's share your feelings with us♥♥♥***♥ ♥
(¸.•'´ (¸.•'´(¸.•'´(¸.•'´*¤* `'•.¸) `'•.¸)`'•.¸)`'•.¸)♥ ♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
buve2329@gmail.com
or
comment

Tuesday, September 15, 2009

கந்தசாமி அனுபவங்களை உங்களோடு பகிரவேண்டும்..


கந்தசாமி பட அனுபவங்களை உங்களோடு பகிரவேண்டும் என்று விரும்புகிறேன்...
உண்மையில் என்னை கந்தசாமி படம் ரசிக்க வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். அண்மையில் சூரியன் வானொலியால் வழங்கப்பட கந்தசாமி பட டிக்கெட் எனது நண்பன் மூலம் கிடைக்கப்பெற்று படம் பார்க்க சென்றோம்.
ஆரம்பம் முதல் இறுதி வரை படம் விக்ரமின் நடிப்பால் செதுக்கப்பட்டு இருந்தது.
படத்துக்காக தன் உடல்வாகை மாற்றும் விக்ரம் இப் படத்திலும் மாற்றி இருந்தார்.
ஒரு மாஸ் கதாநாயகன் வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து
இருந்தார். பலர் படம் சரியில்லை என்று சொன்னாலும் என்னை ரசிக்கவைத்தது.
கந்தசாமி படம்பற்றி நான் அறிந்த விடயங்களையும் இங்கே தொகுத்து தருகிறேன்.

கந்தசாமி' திரைப்படம் ஒரே நாளில் ரூ.95 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். கலைப்புலி தானு தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில், விக்ரம், ஸ்ரேயா நடித்துள்ள திரைப்படம் "கந்தசாமி'. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் 21ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.
.
சென்னையில் 18 தியேட்டர்களில் படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு கடந்த 16ந் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளன்று 1,46,976 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.95,22,498 ரூபாய் வசூலாகியுள்ளது.

இந்த தகவலை அபிராமி திரையரங்கின் உரிமையாளரும், படத்தின் சென்னை நகருக்கான விற்பனை உரிமையை பெற்றுள்ளவருமான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் இவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகி யிருப்பது இதுவரை இல்லாத சாதனை என்று அவர் கூறியுள்ளார்.

முன்பதிவு செய்வதற்கு ரசிகர்கள் காட்டி வரும் ஆர்வம் இந்த படம் ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்கு சான்றாக விளங்குவதாக அவர் கூறியுள்ளார்.

Thursday, September 10, 2009

இதை தவறு என்று.....


இதை தவறு என்று சிலர் சொன்னாலும்
கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிப்பதுவே மெய் என்பதுக்கு இணங்க விசாரிக்கப்பட்ட பின்புதான் உண்மை தெரியும்..
முடிவு மக்கள் ஆகிய உங்கள் கைகளில்தான்..

Friday, September 4, 2009

ராஜ போதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?






ராஜ போதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குட்டிப்பாம்பை நாக்கின் மீது கடிக்க விட்டால் விஷம் உச்சந் தலைக்கு எகிறி மூச்சை அடைக்கும். இதயத்துடிப்பு, மூச்சை எல்லாம் இழந்துவிட்டு இரண்டு நிமிடங்களுக்கு இறந்துவிடுவார்கள். குட்டித் தூக்கம் மாதிரி, இரண்டு நிமிடங்கள் மட்டுமே இறந்து போகும் குட்டி இறப்பு. பின்னர் அதிர்ஷ்டம் இருந்து எழுந்தால் இரண்டு நாளைக்கு ஆல்ஹகால் வாடை இல்லாமல் போதையில் மிதக்கலாம். இந்த போதையைத்தான் ராஜ போதை என்கிறார்கள்.

இப்ப‌டிச் சொல்கிறார்க‌ளே த‌விர்த்து பாம்பு விஷ‌த்தை போதைக்காகப்‌ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து குறித்தான‌அதிகார‌பூர்வ‌த‌க‌வ‌ல்கள் மருத்துவப் பதிவுகளில் தேடிய வரையில் எதுவும் இல்லை. என்றாலும் கஞ்சா, ஹெராயின் போன்ற சில போதைப் பொருட்களை உட்கொண்டவர்கள் போதையின் அளவு போதவில்லையென்றும், மேலும் போதை வேண்டும் என்பதற்காகவும் பாம்புக் கடிக்குச் செல்கிறார்கள் என்பதான தகவல்களுக்கு ஆதாரம் உண்டு.

பெரும்பாலும் பணக்கார பார்ட்டிகளில் கும்மாளத்திற்கு மெருகூட்ட பாம்பாட்டிகளைக் கூட்டி வருகிறார்கள். குறிப்பிட்ட வகை பாம்புகள், அதுவும் குறிப்பிட்ட வயதிற்குள்ளான குட்டிப் பாம்புகளையே கடிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜ நாகத்தில் இருக்கும் விஷம் Neuro Toxic. சற்று வயதான பாம்புகளில் இந்த விஷத்தின் வீரியம் அதிகமாக இருக்கும். இத்தகைய விஷம் அதிகமுள்ள பாம்பைத் தேர்ந்தெடுத்தால் விஷம் மூச்சிழப்பிற்கு அடிகோலி, உடலின் இயக்கத்தை முழுமையாக நிறுத்திவிடும்.

சிலவகைப் பாம்புகளில் இருக்கும் விஷம் ஹீமோஸ்டாட்டிக் விஷம். இந்த வகை விஷம் உடனடியாக இரத்தத்தைக் கட்டியாக்கி உயிரை முடித்துவிடும். இந்த‌மாதிரியான‌கார‌ண‌ங்க‌ளால் பாம்பினைத் தேர்ந்தெடுப்ப‌தில் மிகுந்த‌க‌வன‌ம் தேவை. இந்தியாவில் பெரும்பாலும் குட்டி நாகபாம்புகளையும், மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் பாம்புக்க‌டி என்ப‌து நீண்ட‌கால‌மாக‌இருந்து வ‌ருகிறது. சில‌இந்து சாதுக்கள் ம‌த‌ரீதியான‌கார‌ண‌ங்க‌ளுக்காக‌நாகப்‌பாம்பினைத் த‌ங்க‌ள் நாக்குக‌ளில் கொத்த‌ச் செய்கிறார்க‌ள். மும்பையின் தென் ப‌குதிக‌ளில் மிக‌ப் ப‌ர‌வ‌லாக போதைக்குப் பாம்புக்கடியைப் பயன்படுத்துவது உண்டு. ஒரு க‌டிக்கு ஐம்ப‌து ரூபாய் என்ற‌அள‌வில் கிடைக்கிற‌து. சென்னையிலும் உண்டு என்று சென்ற‌வார‌ங்க‌ளில் ஒரு வார‌இத‌ழின் க‌ட்டுரையில் இருந்த‌து. ஒரு க‌டிக்கு இர‌ண்டாயிர‌த்து ஐநூறு ரூபாயாம்.

விசாரித்துப் பார்த்ததில் சென்னையிலும் நூறு ரூபாய் அள‌வில் பாம்புக் க‌டி இருக்கிற‌து. ராய‌ப்ப‌ன் என்ற வட சென்னை வாழ் மனிதர் எழுப‌துக‌ளின் ம‌த்தியிலிருந்து (த‌ன‌து 20 வ‌ய‌தில்) இன்று வ‌ரை பாம்புக் க‌டியின் ச‌ந்தோஷ‌த்தில் திளைத்து வ‌ருகிறார். க‌ஞ்சா அடிக்க‌ஆர‌ம்பித்தவர், போதை இன்னமும் அதிகம் கிடைக்கும் என்று யாரோ சொன்னதற்காக‌பாம்புக் க‌டியையும் கூட‌ச் சேர்த்திருக்கிறார். ஆர‌ம்ப‌த்தில் 18 ம‌ணி முத‌ல் 20 மணி நேர‌ம் ம‌ய‌க்க‌த்தில் இருந்திருக்கிறார். நாட்க‌ள் ஆக ஆக‌12 ம‌ணி முத‌ல் 14 ம‌ணி நேர‌மாக‌போதை நேர‌ம் குறைந்திருக்கிற‌து. என்ன நினைத்தாரோ தெரியவில்லை எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சிகிச்சை எடுத்து வருகிறார்.

இதுவ‌ரையிலும் பாம்புக் க‌டிக்குப் ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ள் அத‌ற்கு அடிமை ஆன‌த‌ற்கான‌த‌க‌வ‌ல்க‌ள் ப‌திவு செய்ய‌ப்ப‌ட‌வில்லை. உதார‌ண‌மாக‌ஹெராயினைத் தொட‌ர்ந்து உட்கொள்ப‌வ‌ரை திடீரென‌நிறுத்த‌ச் செய்தால் அத‌ன் விளைவு கொடூர‌மான‌தாக‌இருக்கும். இத‌ற்கு Withdrawal Symptoms என்று பெய‌ர். ஹெராயின் கிடைக்காத‌அந்த‌நேர‌த்தில் கிட்ட‌த்த‌ட்ட‌பைத்திய‌நிலையை அடைவ‌ர். தொட‌ர்ச்சியான‌ப‌தற்ற‌ம், விய‌ர்வை, போதைக்காக வேண்டி பின் விளைவுகள் குறித்து யோசிக்காம‌ல் எதையும் செய்த‌ல் போன்ற‌வை சில. தமிழ்/தெலுங்கு படங்களில் போதைக்கு அடிமையான பெண்கள் போதை வேண்டும் என்பதற்காக எதுவும் செய்வர் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்குமே, அப்படி. இது போன்ற‌Withdrawal Symptoms பாம்புக்க‌டிக்கு இல்லை.

பாம்புக்கடிக்குப் பழகியவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதை நிறுத்திக் கொள்ள முடியும் என்ப‌தால் இத‌னை "அடிமையாக்கும் போதை" என்று சொல்ல‌முடியாது. நேரம் கெட்டுக் கிடந்தால் "ஆளை முடிக்கும் போதை" என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Withdrawal Symptoms தொடர்பான வீடியோ.


நான் நேற்று ஒரு படம்(வால்மீகி) பார்த்தேன். அதில் பட நாயகன் பாம்பு மூலம் போதை பெறுவான்.
இதை பார்த்து வியந்த நான் எனது கணனியில் தேடி பெற்ற விடயம்தான் இது.
மேலதிக தகவலுக்காக இது சம்மந்தப் பட்ட வீடியோ படங்களையும் தேடி இதில் இணைத்து உள்ளேன்.
சற்று புதினமாகத்தான் இருக்கின்றது..
அற்ப சுகத்துக்கு இவ்வளவு ரிஸ்கு எடுப்பதா?
சின்ன புள்ள தனமா இல்ல..

Thursday, September 3, 2009

சினிமா நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்கள்

அஜித் ஷாலினி


விஜய் சங்கீதா


சூர்யா ஜோதிகா


ஜெயம்ரவி

Wednesday, September 2, 2009

இரண்டாம் உலகப் போரின் சில காட்சிகள்..



பூக்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும்..


தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் தனது மனைவிக்கு பூக்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று துருக்கி நீதிமன்றம் ஒன்று விநோத உத்தரவை வழங்கியுள்ளது.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள டியார்பகீர் என்னும் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஹேரெட்டின் செட்டின்டாஸ் என்பவர் தனது இரு மனைவிகளில் ஒருவரையும் அவருடைய 10 வயது மகனையும் அடித்துத் துன்புறுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செட்டின்டாஸ் தனது மனைவிக்கு ஒவ்வொரு வாரமும் பூக்கூடையை தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குக் கொடுத்த வர வேண்டும் என்றும், குழந்தை வளர்ப்பது குறித்து ஐந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்ட செட்டின்டாஸ் தன்னுடைய மனைவியின் பிறந்த நாளோ அல்லது தங்களது திருமண நாளோ தனக்கு நினைவில் இல்லை என்றும், இதுவரை தான் தன்னுடைய மனைவிக்கு பூக்களைக் கொடுத்ததில்லை என்றும் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நான் வாசித்து சுவைத்த விடயம்

நினைத்தாலே இன்பம் தரும் வாசகங்கள்...

(1) கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது: மீண்டும் மழை காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது: அதோ; வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது. எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.


(2)உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம். ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.

(3)தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!
(4)ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்

(5)வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால் உலகம் ஏசும் வீழ்ந்தவன் வாழ்துவிட்டால் உலகம் பேசும் இதுவே உலக நியதி !!!!!!!

(6)நான் உயிர் வாழ வேண்டும்´ என்ற உறுதி மிக்க ஆசைதான் வாழ்க்கையாகிறது...

(7)மனிதனுடைய இதயக் குமறலே, அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.

(8)சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு, கடந்து போன வாழ்க்கை, நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் - ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது

(9)கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவேஆறாது

(10)முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், முயலாமை வெற்றி பெறாது

(11)நண்பன் யாரென தெரிந்து கொள் அவன் நல்லவனாயினும் விலகி நில்! அறிவால் ஒருவனை அளந்து கொள்-அல்லது அனுபவித்தாவது புரிந்து கொள்.

Tuesday, September 1, 2009

ஹிட்லர் காதலியை சுரங்கத்தில் மணந்த சுவையான கதை...




ஜெர்மனித் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால் சேதம் அடைய முடியாத அளவுக்கு மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான் இருந்தன. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
1945 ஜனவரி 16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்கு வசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல் பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.
ஹிட்லர் தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930-ம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள் ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர் அடிக்கடி போவார். அப்போது அவருக்கும் ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக கனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதனால் மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
காதலியின் உண்மையான அன்பைக்கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து போனார். "பிரவுன்! உன் அன்பு என்னைப் பிரமிக்கச் செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார். "என்னை உயிருக்கு உயிராக நேசித்தீர்கள். நான் பாக்கிய சாலி. இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், சாகும்போது உங்கள் மனைவியாகச் சாக விரும்புகிறேன். இதுதான் என் கடைசி ஆசை" என்றாள் பிரவுன். இந்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படி அறை அலங்கரிக்கப்பட்டது.

சட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர் தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.
காலை 11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவா எழுதிய உயில் வருமாறு: "வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவே ஹிட்லரின் உயில்.
அன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: "ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான் இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி". இவ்வாறு ஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றை எழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: "முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாக கலந்து கொண்டவன் நான். அது நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப் போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்". இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.
1 1
Posted by idea mani at 4:01 AM

சக்திடிவி இன்றைய மக்களின் பலவீனங்களை...


சக்திடிவி இன்றைய மக்களின் பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு தொலைகாட்சி மக்களின் நண்பன் போல் அவர்களின் நன்மை தீமைகளை வெளியில் கொண்டுவரும் ஒரு அகிம்சையான ஆயுதம்.ஆனால் இன்று அது மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அவ்வளவு ஏமாற்றுகிறது.
மலையாக மக்களை வைத்து திரு.ரங்கா தன்னை ஒரு மலையாக கதாநாயகன் போல் சித்தரித்து கபடநாடகம் ஆடி வருகிறார்.

மலையகம் தங்களின் தலைநகர்,கோட்டை என்று மார்பு தட்டிக்கொள்ளும் கொள்ளும் வேளை அவர்களின் கஷ்டங்களை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர ஒரு தீர்வும் கண்டதாக தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியின் வெற்றி அது எத்தனை வருடமாக செய்கிறோம் என்பதில் இல்லை. அதன் மூலம் மக்கள் எவ்வளவு பயன் பெற்றார்கள் என்பதில்தான் உள்ளது என்பதை திரு.ரங்கா புரிந்து கொள்ள வேண்டும்.
நீக்கள் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. சுனாமி நேரம் மற்றும் ஏனைய அனர்த்தங்களின் போது நீங்கள் எமது உறவுகளுக்கு செய்த உதவி மிகப்பெரியது.
மற்றும் பழைய தொகுப்பாளர்கள் முகியம்தான் ஆனால் புதியவர்களின் வருகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இந்தியாவில் இருந்து ஒருவரை கொண்டு வந்து இங்கே நிகழ்ச்சிகளை செய்யவிடும் அளவுக்கு எமது நாட்டில் உள்ளவர்களின் திறமை இன்னும் மங்கவில்லை. தமிழின் முதல்தரம் மகளின் முதல்வன் என்பது என்ன?எஆது தமிழை கொலை செய்யும் அளவுக்கு அவர்களின் பேச்சுவழக்கு உள்ளது.
தவறுவிடுவது மனித இயல்பு அதை திருத்தாமல் இருப்பது மடமை.

தெரிவிப்பது நாங்கள் திருந்துவது நீங்கள்.