
முத்தமிடும் இடத்திற்கு
இருவரும் சேர்ந்தே போவோமா ?
மனிதர் சத்தம் இல்லா இடத்தில்
நீயென் பக்கம் இருப்பாயா ?
காதல் (என்னுள்) பெருக
கண்கள் (உன்னை) பருக
மனதோ (கொஞ்சம்) கிறங்க
அன்பே (அருகில்) வருக !
பதிவு பதிய வருகிறேன் புதிது புதிதா தருகிறேன் வாருங்கள் வந்து பாருங்கள் தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....
வில்லியம் சேக்சுபியர் (ஏப்ரல் 26, 1564 - ஏப்ரல் 23, 1616 - திகதிகள் ஜூலியான் நாட்காட்டிப்படி) ஆங்கில நாடக எழுத்தாளரும், கவிதையாசிரியரும் ஆவார். ஆங்கில இலக்கிய உலகில் ஓர் சிறந்த நாடக ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் போற்றப்படுகின்றார். இவர் 38 நாடங்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் புகழானது இவரின் இறப்பின் பின்னர் அதிகரித்தது.
இவரது பங்களிப்பின் காலத்தை அறுதியிட்டுக் கூறமுடியாதெனினும் அநேகமான ஆக்கங்கள் 1586 இற்கும் 1616 இற்குமிடையிலான காலப் பகுதியிலேயே நிகழ்ந்தது. நகைச்சுவை நாடகங்களையும், துன்பியல் நாடகங்களையும் வழங்கியவர்களில் இவர் மிகச்சிறந்தவராக விளங்கினார்
சேச்சுபியரின் இலக்கிய ஆக்கங்கள் பரவலாக வழக்கில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாடகங்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நடித்துக் காட்டப் படுகின்றன.

மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்
பொழுது மாறாதிருப்பதுதான் காதல்
ஷேக்ஸ்பியர்
என்றும் மாறாத காதல்
பார்த்ததும் வருவதில்லை!
கிறிஸ்டோர் மார்லோவ்
காதல் பேய் மாதிரி.எல்லாரும் அதைப் பற்றிப்
பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.
லே ரோச்சிஃபோகால்ட்
நம்மை இன்னொருவரிடம்
கண்டுபிடிப்பதுதான் காதல்.
அலெக்ஸாண்டர் ஸ்மித்
காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை;
அந்தக் காரணம்தான் தெரிவதில்லை.
பாஸ்கல்
மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்ல காதல்;
இணைகின்ற இருவருக்கும் இந்த உலகம்
ஒன்றாகத் தெரிந்தால்தான் காதல்!
செயிண்ட் எக்ஸ்யூபெரி
கடுகளவு நம்பிக்கையே
காதல் பிறப்பதற்குப் போதுமானது!
ஸ்டெந்தால்
காதல் எங்கு இருக்கிறதோ
அங்குதான் வாழ்க்கை இருக்கிறது
மகாத்மா காந்தி
காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை; தங்கள்
காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால்
இருக்கலாம்.
ஷேக்ஸ்பியர்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!