Sunday, May 31, 2009

காதல் அழகானது

ரொம்ப நாளைக்கு பிறகு நான் மிகவும் ரசித்த பாடல்

நீங்களும் ஒரு தடவை பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்

"இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி"



காதல் சாம்ரஜயம் பட பாடல்

இந்த படம் ரிலிஸ் ஆச்சானுதெரியல தெரிஞ்சா சொல்லுங்க

விஜய்யின் அரிய படங்கள் ...........................


சும்மா பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லிட்டு போங்க.



விளையும் பயிர் முலையிலே தெரியும் என்பார்கள். 
எவ்வளவு உண்மைன்னு இப்பதான் புரியுது.
உங்களுங்கு தெரியுதா




எல்லா நேரத்துலையும் ஹிரோவா இருக்கமுடியுமா 
அதுதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி வேற எதுவும் உள்குத்து இல்லைங்க.



தலைவரை லோகல் ஹிரோன்னு யாரு சொன்னது.
அவரோட சிஷியாந்தாங்க பக்கத்துல இருக்குரவர்




தைரியம்ன்னா என்னன்னு கேக்குறவங்குளுக்காக.
சத்தியமா டூப் போடாம எடித்ததுங்க.




டாக்டர்தாங்க நம்ம தலைவர் வேனுமுன்னா அவர் பக்கத்துல பாருங்க.




இன்னும் புரியலையா அடுத்த படத்தை பாருங்க.........


மக்கள் தளபதி ஆயிட்டாருங்க....... 
அடுத்து என்னன்னு கேக்குறிங்களா
அடுத்த படத்தை பாருங்க.....
.........................
...............
.....

அளவுக்கு மிறினா இப்படிதாங்க................

அளவுக்கு மிறினா இப்படிதாங்க................


நிறய கண்டைனரை பின்னாடி ஏத்திட்டதால வண்டி கொடை சாஞ்சிடுச்சி.


கவனகுறைவும் அலசியமும் எவ்வளவு அவமானத்தை
ஏற்படுதிவிட்டது பாருங்க.





பின்னாடி ரன்வேயோடா வுக்கந்துடுச்சி............





அட தலைகனம் இல்லனாகூட் பிரச்சனைதான் போல இருக்கு...................






பறக்க ஆரம்பிச்சிடுச்சோ................






Friday, May 29, 2009

நான் சுவாசிப்பது இன்றே கடைசி...........

நீ மிச்சம்
விட்டு சென்ற
அந்த ரோஜாவுடன்
ஒற்றையாக நான்
அதே நதிக்கரையில்
இன்றும் காத்துக்கிடக்கின்றேன்.

போர்முனையில்
புதைந்துப் போனதாக
ஊர் பேசுகின்றது.
உண்மைதானா?
நீ என்னுள் வாழ்வதாக
சொன்னது,சிருங்காரா?

உன் இதழ் பதித்து
பூவின் இதழில் இட்ட
முத்தத்தின் வாசம்
கரையெல்லம், நீ என்றே
பரவிக்கிடக்கின்றது.

மீண்டும் வருவதாய் இருந்தால்
இன்றே வந்துவிடு.

மனிக்கட்டு நரம்புகள்
அறுபட்டு,  நதிக்கரையெல்லாம்
குருதியின் வாசம்.

நான் சுவாசிப்பது
இன்றே கடைசி.

என் முகம்தனில்…


திருமேனி தரிசனம்
தினம்தறித்த கண்கள்
உன் தொழைதலில்
துவண்டு கிடக்கின்றது
என் முகம்தனில்…

விழியில் பிறந்து
கன்னம் கடந்து
இதழினை கடந்த
உப்புக்கரைசலோடு
எனை கடந்து போனாயோ?

பாதி தூக்கதில்
என்னை கண்விழிக்கச்செய்யும்
கனவாகப் போனாயோ?

என் கவிதைப்
புத்தகங்களின் ஓரங்களை
தின்றுப் போன கரப்பானின்
வாயிடுக்கினில் மாட்டிக்கொண்டாயோ?

பறிக்க மறந்த
பூவின் மகரந்ததில்
புதைந்திருக்கின்றாயோ?

ஊஞ்சல் காற்றாய்
என் குழல் சுருள்களில்
உன்னை சூடிக்கொண்டாயோ?

எதுவாக
இருக்கின்றாய் நீ,
நான் மட்டும்
வாழும் இவ்வுலகில்.

உனக்கும் சேர்ந்து நானே காதலிக்கிறேன்!

*
நான் படித்ததில்
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்
வரிகளே!

சில்மிஷியே
அருகினில் வா!

*
உன்
வீட்டு வாசலில்
அறிவிக்க செய்

"தேவதை ஜாக்கிரதை"

*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்

பதறுகின்றது என்
மனசு

ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..

*
நீ 'ம்' கூட
சொல்லவேண்டாம்

கடைக்கண்ணால்
மட்டும் பார்

உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!

*
என்னை முதன்முதலாக
பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே

எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…

*
"க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்"

புரிகின்றதா?

இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்

*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது

கோபமாய் வருகின்றது

தேவதையே..

*
நீ
தாமதமாகவே

வருவாய் என்றாலும்

நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை

களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!

*
சமிபத்தில்
நீயும்
நானும்
லாபமடைந்த விஷயம்

முத்தம்.

 *
நீ என்னுடன்
சண்டையிடுவதே

முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்கு
தெரியும்

அது உனக்கும்
தெரியும்

பின் எதுக்கு
சண்டை?

*
நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ

பத்திரப்படுத்த
வேண்டும்

என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..

*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்

உண்மையும் உண்டு.

*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது

அது உன்னுடன்
மட்டும் எனும்போது..

*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே

உன்னிடமிருந்து
மட்டும்

*

இன்றும்
என்னெதிரே
தேனீர் குடுவை

உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்

நீ பருக அருகிலில்லை
என்றாலும்

உனக்கானவைகளை
நான் என் செய்ய?

*

நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட

நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே

என்னை கவலையடையச்செய்கின்றது

"நான் உன்னை காதலிக்கின்றேன்".

*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்

இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..
*
புத்தகக் கண்காட்சியில்

உன்னை
என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்

என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..

தலைப்பு காதல்

*

உன்னை என் கவிகள்
வெட்கப்படுத்தும் போதெல்லாம்

நான் நீயாகிவிடக்கூடாதா
என்றெண்ணி நானும்
வெட்கமடைகின்றேன்

*
நீ
கவிதைகள் எழுதவேண்டும்

நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்

என் கவிகளை
நீ படித்துணர்ந்ததை
போல…

*
உன்னைக் கண்டமுதலே
வானமும் அதன் நீலமும்
தனித்தனியே
உணர்ந்து கொண்டேன்

*
உன்னை கண்டமுதல்

இதுநாள் வரை
நீ எங்கு,எப்படி இருந்தாய்
என்பதிலேயே
தாகம்கொண்டது
மனசு

*
என் கால்களிடம்
கேட்டுப்பார்

உனக்காக காத்திருந்த
தருணங்களில்

என் கால்களின்
வலியை எப்படிகரைத்தேன்
என்று அழகிய கவியாக
சொல்லும்..

உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
அவைகளும் கவிஎழுதுகின்றன

*
என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன

*

நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்

உன் தனிமையே..

*
விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய நேற்றைய பேச்சு

தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*

உயிரை அழுத்தி
நீ முத்தம் இட்டாலும்
காமமற்ற காதலில்
கவிதையெழுதவே
தோன்றுகின்றது..

நம் கூடலில்
*
வெளிர்ததெல்லாம்
தேவதைகள் என்றென்னியிருந்தேன்

உன்னைகாணும் வரை
சாம்பல்நிறத்து
தேவதையே!

*

நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி
இன்றும் என் விரல்களில்
முத்தங்கள் பதிக்கின்றன

உனக்கா காத்திருந்த
இந்த தருணத்தில்

*உன் பிரிவினில்

கண்களில்
கரையும் உப்புக்கரைசலை
உள்வாங்கிக்கொண்டுபிரிதலில் உனக்கொன்றும்
சலனமில்லை
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்
இருந்தும்
ஏன்? விழிகொண்டு
பேசமறுக்கின்றாய்
நம் சந்திப்புகளில்*நீ
என் மனப்பூ
சேமித்த உணர்வுத்துளியடி..பொறுத்திருந்துபார்
காதல் முத்தொன்றை
பரிசளிப்பேன்
பூவின் இதழ்களை
விரித்து…* நம் நடைப்பயணஙகளில்
நமக்கு துணையாக
பூமரங்கள் சிந்திடுமே
அந்த சிவப்பு பூக்களை

நினைவிருக்கின்றதா?

அவைகளே உனக்கான
சந்தங்களை எனக்கு
தந்து, கவிஞனக்கின என்னை
இன்று!
*

ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே

என் கவிதை
கருவறையில்
அவைகள்தான்
உன் சாயல்
குழந்தைகள்…

*
உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் - பின்

சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து

வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.

*
என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ

உடைக்க நினைக்காதே

அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்

மெல்லியவளே!

*
வார்த்தைகளுக்குள்
அடங்காத
என் வாசகியேநீ வாசிக்க
தவம் கிடக்கின்றது
என் கவிகள்*
உன் நிலம்
மழைப்பொழிய

காத்துக்கிடக்கின்றது
என் வானம்

முரண்களுக்கு
முடிவில்லை
காதலில் மட்டும்

*நில்
கவனி
காதலில்
காதலி

*

என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து

நான் பாதசாரியாக
பயணித்த என் தேடலில்

நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது

திசையினையே
நீயெனக்கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்

*
சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ

அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்

என் மனசு.

*
என் செய்வது

நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை

பெயர்பெற்றது
தென்றலென்று.

*

கள்ளப் பார்வையில்.........


புன்னகைத்து
விட்டுச்சென்ற
உன் ஞாபகத்தின்
சுவடுகளின் சூடு
இன்னமும் என்
இதயக்கூட்டிலே
ஏங்கிக்கிடக்கின்றது!

எத்தி நின்று
கள்ளப் பார்வையினில்
என் உயிர் வேர்களை
உன்னிடம் நோக்கியே
பயணிக்க செய்கிறது
உந்தன் கன்னக்குழிகள்!

சேய் விட்டு பிரியும்
தாயினை கை நீட்டி
அழைத்து ,பின் தொடரும்
பிஞ்சு கால்கள் போல!