Tuesday, July 14, 2009

தன்னம்பிக்கையே உயிர்!


1995 ஆம் ஆண்டு வாகன விபத்து ஒன்றில் லாரி ஏறியதில் பாதி உடம்புடன் உயிர் பிழைத்த அதிசய மனிதர்.தன்னம்பிக்கையே வாழ்க்கையின் உயிர் என்பதை இவர் நிரூபித்திருக்கிறார்.




(போட்டோசாப் போன்றவற்றை அறிந்தவர்கள் இவையெல்லாம் ஏமாற்றுவேலை என்று நினைக்கிறோம்... ,எதற்கும் கூகிளில்
"Peng Shulin" தேடிப்பாருங்களேன்)

Miracle man walks again

Thursday, June 18, 2009

புஷ் செருப்பு அடிக்கு முன்னும் பின்னும்....


கையளவு இதயத்துள் உன்னைச்சுமக்கிறேனே நான்..


தென்றலாய் தொட்டாய்

புயலாய் தாக்கினாய்

மறக்க நினைக்கிறேன்

மூச்சுக் காற்றுக்குள்ளும்

சுவாசமாய் நீ....தானே!





தன் உடம்பின்

பாரத்தை விடக்

கூடிய பாரத்தைச்

சுமக்குமாம் எறும்பு.

கையளவு இதயத்துள்

உன்னைச்

சுமக்கிறேனே நான்.





மறக்க நினைக்கும்

போதுதானே தெரிகிறது

உன்னை நான்

நேசிப்பதின் ஆழம்.





உறங்க மனமில்லை

நினைவில் நீ...

உறங்கினால்

விழிக்க மனமில்லை

கனவில் நீ!!!

Friday, June 12, 2009

காதல் வந்தால் சொல்லி.....


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
(சுட்ட)
கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி

(காதல் வந்தால்...........)

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே
காதல் வந்த பின்பு

Babe! Tell me you love me, It's never late, Don't hesitate...!

சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி.. கொல்லுதடி

(காதல் வந்தால்..............)

பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னைக் கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை...
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை..
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி...
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி... கொல்லுதடி

(காதல் வந்தால்...)

உன்னைப் பார்த்த பின்பு...


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

(உன்னை........)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ

(உன்னை..........)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ

(உன்னை...........)

சக்கரை நிலவே பெண் நிலவே......

இது நான் அடிக்கடி முணுமுணுக்கும் ஒரு பாடல்...
ஏன் பிடிக்கும்னு காரணமும் சொல்லவும் வேண்டுமா?? :)



சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே!

(சக்கரை.....)

மனம் பச்சை தண்ணீதான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

(சக்கரை.....)

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை
அன்பே உன் புண்ணகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே என் புண்ணகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா
ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதை அல்ல கல்லின் சுவரா?

(கவிதை பாடின.....)

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்த சிலை
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்.

(கவிதை பாடின.....)

Thursday, June 11, 2009

காலமெல்லாம் காதலியாய் என்னோடு நீ வேண்டும்...

 

அரவமற்ற காரிருளில்
கவிக்குயிலாய் என்னருகில்
கவிபாட நீ வேண்டும்...
கவியோடு என் கவலை
காற்றோடு கலைந்து
பறந்தோடி போகவேண்டும்...

தூற்றும் உள்ளங்கள்
போற்றும் காலம்
எமைநாடி வரவேண்டும்...
வாழ்வின் வாசனையை
தோல்வியின்றி சுவாசித்திட
அகிலத்தில் நீ வேண்டும்...

மகிழ்வென்ற மகுடத்தை
மரணம்வரை சுமந்திட
கணம் தப்பாமல் எப்போதும்
என்கூட நீ வேண்டும்...
புண்பட்ட நெஞ்சத்தில்
ஒத்தடமாய் உன்விரல்கள்
தாளங்கள் போடவேண்டும்...

தப்பொன்றும் செய்யாத
வழிகாட்டி நீயாக
எப்போதும் என்னோடு
நிஜமாக நீ வேண்டும்...
உன் தோள்சாயும் வேளையில்
தலைகோதும் விரலாக
பலருள்ளம் போற்றிடவே
உளமருகில் நீ வேண்டும்...

பந்தாக நீயும்
பந்தாவில்லாமல் நானும்
எந்நாளும் ஒன்றாக
காற்றோடு கதைபேச வேண்டும்...
சேற்றுநில தாமரையாய்
போற்றும்வாழ்வு வாழ்ந்திடவே
காலமெல்லாம் காதலியாய்
என்னோடு நீ வேண்டும்...