Saturday, October 1, 2011

சுகம் காணும் என்சோகம்...

அண்மையில் லங்காஸ்ரீ கவிதை பக்கத்தில் உறுப்பினறாக இணைத்து கொண்டேன். அதற்கு சமர்பிப்பதக்காக நான் வடித்த கிறுக்கல் உங்கள் ரசனைக்கு .....


கல் உருவில் தெய்வங்கள் பலவுண்டு இவ்வுலகில்- என்சோகம் 
துடைத்திட ஒன்றும் இல்லை என்னருகில் 

உன் உரு கண்டேன் என் உடல் மனம் இழைத்தேன் 
உன் வாய் மொழியை என் தாய்மொழி என்றேன்.
உன் நகம் தீண்டி என் அகம் மகிழ்ந்தேன் அன்று- இன்று 
என் மனம் சீண்டி புறம் விட்டு சென்றாய்....
உன் நிழல் என்னுடன் உன் நினைவு என் நெஞ்ச்சுடன்
சுகம் காணும் என்சோகம் என்றும் உன் நினைவுடன் .....