Thursday, June 18, 2009

புஷ் செருப்பு அடிக்கு முன்னும் பின்னும்....


கையளவு இதயத்துள் உன்னைச்சுமக்கிறேனே நான்..


தென்றலாய் தொட்டாய்

புயலாய் தாக்கினாய்

மறக்க நினைக்கிறேன்

மூச்சுக் காற்றுக்குள்ளும்

சுவாசமாய் நீ....தானே!





தன் உடம்பின்

பாரத்தை விடக்

கூடிய பாரத்தைச்

சுமக்குமாம் எறும்பு.

கையளவு இதயத்துள்

உன்னைச்

சுமக்கிறேனே நான்.





மறக்க நினைக்கும்

போதுதானே தெரிகிறது

உன்னை நான்

நேசிப்பதின் ஆழம்.





உறங்க மனமில்லை

நினைவில் நீ...

உறங்கினால்

விழிக்க மனமில்லை

கனவில் நீ!!!

Friday, June 12, 2009

காதல் வந்தால் சொல்லி.....


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
(சுட்ட)
கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி

(காதல் வந்தால்...........)

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே
காதல் வந்த பின்பு

Babe! Tell me you love me, It's never late, Don't hesitate...!

சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி.. கொல்லுதடி

(காதல் வந்தால்..............)

பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னைக் கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை...
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை..
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி...
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி... கொல்லுதடி

(காதல் வந்தால்...)

உன்னைப் பார்த்த பின்பு...


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

(உன்னை........)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ

(உன்னை..........)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ

(உன்னை...........)

சக்கரை நிலவே பெண் நிலவே......

இது நான் அடிக்கடி முணுமுணுக்கும் ஒரு பாடல்...
ஏன் பிடிக்கும்னு காரணமும் சொல்லவும் வேண்டுமா?? :)



சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே!

(சக்கரை.....)

மனம் பச்சை தண்ணீதான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

(சக்கரை.....)

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை
அன்பே உன் புண்ணகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே என் புண்ணகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா
ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதை அல்ல கல்லின் சுவரா?

(கவிதை பாடின.....)

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்த சிலை
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்.

(கவிதை பாடின.....)

Thursday, June 11, 2009

காலமெல்லாம் காதலியாய் என்னோடு நீ வேண்டும்...

 

அரவமற்ற காரிருளில்
கவிக்குயிலாய் என்னருகில்
கவிபாட நீ வேண்டும்...
கவியோடு என் கவலை
காற்றோடு கலைந்து
பறந்தோடி போகவேண்டும்...

தூற்றும் உள்ளங்கள்
போற்றும் காலம்
எமைநாடி வரவேண்டும்...
வாழ்வின் வாசனையை
தோல்வியின்றி சுவாசித்திட
அகிலத்தில் நீ வேண்டும்...

மகிழ்வென்ற மகுடத்தை
மரணம்வரை சுமந்திட
கணம் தப்பாமல் எப்போதும்
என்கூட நீ வேண்டும்...
புண்பட்ட நெஞ்சத்தில்
ஒத்தடமாய் உன்விரல்கள்
தாளங்கள் போடவேண்டும்...

தப்பொன்றும் செய்யாத
வழிகாட்டி நீயாக
எப்போதும் என்னோடு
நிஜமாக நீ வேண்டும்...
உன் தோள்சாயும் வேளையில்
தலைகோதும் விரலாக
பலருள்ளம் போற்றிடவே
உளமருகில் நீ வேண்டும்...

பந்தாக நீயும்
பந்தாவில்லாமல் நானும்
எந்நாளும் ஒன்றாக
காற்றோடு கதைபேச வேண்டும்...
சேற்றுநில தாமரையாய்
போற்றும்வாழ்வு வாழ்ந்திடவே
காலமெல்லாம் காதலியாய்
என்னோடு நீ வேண்டும்...

அன்பு கொண்ட இதயத்தினை பணம் மறுக்கும்.......


எழுதுகிறேன் ஒரு கவி
எனக்காக அல்ல !!!


உன்னால் என் மனதில்
ஏற்ப்பட்ட காயத்தை சுட்டிட...

உன்னை நினைத்த அந்நாளில்
உள்ளத்தை தொலைத்தேன்
அன்பு கொண்ட இதயத்தினை பணம் மறுக்கும்
என்பதை உணர்ந்து கொண்டேன்!!!

இந்த ஏழைக்கு எட்டாது என்று
என் மனதை மாற்றிட முயன்றேன்
ஆனால் இதயமோ அடம்பிடிக்கிறது
உன்னால் என்றுமே மறைந்து போகா
வடுக்கல் என்னைச் சூழ...

உயிரான அன்பு உருக்குலைந்தாலும்
என் உயிர் வாழும் வரை உன் நினைவுகள்
உள்ளதை விட்டகலாது!!!!

மறு ஜென்மம் மானிடராய்...
செல்வத்துடன்
பிறந்து விட்டால்
உன் அன்பை
பணம் கொடுத்து வாங்குவேன்.!!!

Wednesday, June 10, 2009

உன்னையும் என்னையும் இணைக்கும் உறவு அந்த பகவான்க்கு மட்டுமே புரியும்...


உயிரே...!!!
உனை நினைத்தேன்...
உயிர் துடித்தேன்
உலகில் ஆயிரம்
பேருண்டு - ஆனால்
உனைப்போல்
யாரும் இல்லை ...!!!

உறவுகள் பல
சுற்றிவரினும்
உன்மீது நான்
கொண்டது
காதலா???
நட்பா???
புரியவில்லை எனக்கு !!!

நீ உனது
காதலை என்னிடம்
மறைமுகமாக
நீ சொன்ன போது
உன்னை முதலில்
எனக்கு பிடிக்கவில்லை ...

காரணம் உன் அழகு
போதாது என்பதால்
அல்ல... !!!
ஆனால் இன்று
உன் அன்பு என்னை
ஈர்ந்து விட்டது ...!!!

எனவே உனது
அன்பை மறக்க
முடியாது -தினம்
உருக்குலைந்து
போகிறது
என் இதயம் ....!!!!

உயிரே உன்னை
சந்திக்கும் போது
பிரிவு ஏற்படுமென
நான் உணரவே இல்லை
உன்னை பிரிந்ததனால்
என் மனம் தவிக்கிறது....

உனை தினம் எதிர்
பார்த்து அந்த நாளுக்காக
உன் உறவு காத்திருக்கிறது ...

என்றோ ஒருநாள்
உறவு எதுவானாலும்
உன்னையும் என்னையும்
இணைக்கும் உறவு
அந்த ஆண்டவனுக்கு
மட்டுமே புரியும்...

உயிர் உள்ளவரை
தொடரட்டும் எம்
உறவுப்பாலம்
இப்பூமி மீது.. .. !!!

Tuesday, June 9, 2009

நீ முத்தமிட்ட சத்தம் என்னில்........


நீ முத்தமிட்ட சத்தம் என்னில்
…….. உன் காதல் சொல்லி தாலாட்டுது
உன் இமைகள் இரண்டும் பறந்து
…….. தூதாய் வந்து காதல் சொல்லுது
உன் வதனம் பேசும் பாஷை
…….. என்னெஞ்சில் இன்பத்தீயை மூட்டுது
நீ தொட்டு பேசும் போது
…….. என் நெஞ்சில் பூக்கள் மலர்கிறது.

நீ கொஞ்சி பேசி சிரித்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ கோவம் கொண்டு சிவந்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ எங்கோ நடந்து செல்கையில்
…….. என் பாதை ஆகிறாய்
நீ அமரும் வேளையில்
…….. எனை பக்தனாய் சுற்றச்செய்கிறாய்

சண்டைசெய்யும் போது அதிர்ந்து
…….. உதிராத உன் வார்த்தை
மண்டைகுடைந்து என்னுள்
…….. எரிமலை தாக்கத்தைக் கொடுக்கின்றது
உன் மவுனவிசும்பலின் சோகம்
…….. கூர்கொண்ட உழியாய் மாறி
என் மன இருக்கத்தை
…….. உடைத்து தூள்தூளாய் சிதைக்கின்றது.

உன் மவுனத்தின் பாஷை கொடிது
வன்மமின்றி வன்முறை செய்யுது கடிது
என் நெஞ்சம் எப்படி தாங்குமதை நெடிது
நன்றாய் உணர்ந்ததால் சிரிக்கின்றாய் சிரிது.

நாட்கள் நகரும் போது
…….. இலைகள் சருகாய் மாறும்
என்ன விந்தை செய்தாய் என்னுள்
…….. புதுத்தளிராய் துளிர்க்கின்றாய்
மலர்ந்த பூவின் வாசம்
…….. நாளும் குறைந்தே தேயும்
மர்மமென்ன சொல்வாய் நாளும்
…….. புதுமலராய் வாசம் வீசுகின்றாய்.

 என்னில்
…….. உன் காதல் சொல்லி தாலாட்டுது
உன் இமைகள் இரண்டும் பறந்து
…….. தூதாய் வந்து காதல் சொல்லுது
உன் வதனம் பேசும் பாஷை
…….. என்னெஞ்சில் இன்பத்தீயை மூட்டுது
நீ தொட்டு பேசும் போது
…….. என் நெஞ்சில் பூக்கள் மலர்கிறது.

நீ கொஞ்சி பேசி சிரித்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ கோவம் கொண்டு சிவந்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ எங்கோ நடந்து செல்கையில்
…….. என் பாதை ஆகிறாய்
நீ அமரும் வேளையில்
…….. எனை பக்தனாய் சுற்றச்செய்கிறாய்

சண்டைசெய்யும் போது அதிர்ந்து
…….. உதிராத உன் வார்த்தை
மண்டைகுடைந்து என்னுள்
…….. எரிமலை தாக்கத்தைக் கொடுக்கின்றது
உன் மவுனவிசும்பலின் சோகம்
…….. கூர்கொண்ட உழியாய் மாறி
என் மன இருக்கத்தை
…….. உடைத்து தூள்தூளாய் சிதைக்கின்றது.

உன் மவுனத்தின் பாஷை கொடிது
வன்மமின்றி வன்முறை செய்யுது கடிது
என் நெஞ்சம் எப்படி தாங்குமதை நெடிது
நன்றாய் உணர்ந்ததால் சிரிக்கின்றாய் சிரிது.

நாட்கள் நகரும் போது
…….. இலைகள் சருகாய் மாறும்
என்ன விந்தை செய்தாய் என்னுள்
…….. புதுத்தளிராய் துளிர்க்கின்றாய்
மலர்ந்த பூவின் வாசம்
…….. நாளும் குறைந்தே தேயும்
மர்மமென்ன சொல்வாய் நாளும்
…….. புதுமலராய் வாசம் வீசுகின்றாய்.

Saturday, June 6, 2009

மழை அழகின் ஓர்துளி நீ.....



நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன்
நம்மோடு சேர்ந்து
தானும் நனைந்து
நடுங்கியது மழை!

*

அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது
ஏதாவது ஒரு காதலின்
கண்ணீர்!

*

மழை
மழையை மட்டும் கொணர்வதில்லை
சில நேரங்களில்
சில தேவதைகளையும்!

*

நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!

*

சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது
உன் மேல் விழும்
மழைத்துளி!

*

மழை
உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில்
அவஸ்தையாகவும்!

*

மழை வேண்டி
வருபவர்களையெல்லாம்
விரட்டியடித்தபடி இருக்கிறான்
கடவுள்!
படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
உன்னை ஊருக்குள்
அழைத்து வரும்படி!

*

ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!

*

இன்றும் விடாமல்
பெய்தபடி
நீ
என்னைக் குடைக்குள்
அழைத்துக் கொண்ட
அவ்விரவின் மழை!

*

என் கவிதைகளுக்கு
என்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
உன் கையால்
மழை நாளில்
காகித கப்பல்களாவதைவிட!

*

மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!

*

சிறுமழை
பெருமழை
எதுவும்
மழையை மட்டும் கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும்!

*

நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான மழை!

*

நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
காதல்!

*

முகிலின் நிராகரிப்பு
மழை!
உன்னின் நிராகரிப்பு
என் கண்ணீர்!

*

குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க
குதூகலமாய்
பொழியத் தொடங்கியது மழை!

*

மின்னல்
மழையின் கிறுக்கலென்றால்
உன் விரல்
என்மேல் வரைந்ததை
என்னென்பது?!

*

மழை
மழையை மட்டும் குறிக்காது
காதலையும்!

*

நீ பெண்ணாகவும்
நான் ஆணாகவும் ஆனதின் இரகசியம்
துலங்கியது
ஓர் மழையிரவில்!

*

நீ
பெண்ணின் ஓர்துளி
நான்
ஆணின் ஓர்துளி
வா,
காதல் பொழிவோம்!

*

என் வேர்கள்
காத்திருக்கின்றன
உன்
மழைக்காக!

*

மழை
வானின் ஓர்துளி
நீ
அழகின் ஓர்துளி!

உயிர் உயிரோடு கலக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது!


அருகருகே வரையப்பட்டாலும்
சேரமுடியாத சித்திரங்களாய்...


சந்திக்கும் தூரத்தில்
சந்திக்க முடியாமல் நாம்…!


போகும் இடமெல்லாம்
இங்கே இருப்பாயா?
என தேடித்தவித்த பொழுதுகள்…


பார்க்கும் வெளியில்
நீ இருப்பாயென
கண்ணுக்குள்ளே உன் படத்தை
அசைபோட்ட நாட்கள்…


எனையறியாத துடிப்பு
இதயத்துடிப்பையும் தாண்டி
வதைக்கிறது
உன்னைப் பார்க்க
என்னை விட்டு உயிர்மட்டும்
போகநினைப்பதுபோல!


உன் நினைவுகளைக்கொண்டே
வெளி சமைத்து
விளையாட்டுக்குக் கூட
பிரிந்து பறக்கமுடியாத
ஊனப்பறவையாய் நான்…!


காலச்சுவடுகள் தந்த
கண்ணீரெல்லாம்
நீ பேசும்போது மட்டும்
மாயமாகுவதன் மர்மம் என்ன?


வெறும் பார்வைகளால் பேசுகையில்
நீயும் நானும் ஒரேசமயத்தில்
சிரிப்பது எந்த பந்தத்தில்?


நான் தனித்த இரவுகளில்
என்னை வந்து பார்
அப்போதும் உன்னுடன்தான்
பேசிக்கொண்டிருப்பேன்!


எப்போதாவது நாம்
சந்திக்கலாம்
அப்போது நான்
இறந்துவிடாமல் பார்த்துக்கொள்
உயிர்
உயிரோடு கலக்கத்
துடித்துக்கொண்டிருக்கிறது!

Wednesday, June 3, 2009

திருமணத்தில் முடியாத காதல் ........

 
காதல்
இல்லாமல்
வாழ்க்கையும்
இல்லை

மரணம்
இல்லாமல்
உயிரினம்
இல்லை

காதல்
இல்லாமல்
இதயமும்
இல்லை

சோகம்
இல்லாமல்
வாழ்க்கையும்
இல்லை

எதிர்ப்பு
இல்லாமல்
காதலும்
இல்லை

எதிர் நீச்சல்
போடாமல்
முன்னேற்றம்
இல்லை

ரனம்
இல்லாமல்
காதலும்
இல்லை

அலைகள்
இல்லாமல்
கடலும்
இல்லை

திருமணத்தில்
முடியாத காதல்
உண்மையான
காதலும் இல்லை

ஒரு சாதாரண குடிமகனாக அஜித் ஓட்டு போடுவதற்காக வரிசையில் நிற்கும் காட்சி.......

ajith

 

பறக்கும் கார் கண்டுபிடிப்பு.........

terrafugia-transition-plane

.

நவீன காலத்து பழமொழிகள்........

தண்ணியில கப்பல் போனா ஜாலி
கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ
காலி
தூங்கதுக்கு முன்னாடி
தூங்கப் போறேன்னு சொல்ல
முடியும்..ஆனா
முழிக்கிறதுக்கு முன்னாடி
முழிக்கப் போறேன்னு சொல்ல
முடியுமா?
டீ கப்புக்குள்ள டீ
இருக்கும்..ஆனா
வோர்ல்ட் கப்புக்குள்ள
வோர்ல்ட் இருக்குமா?
மண்டையில போடுறது DYE
மண்டைய போட்டா DIE
புள்ளி மான் உடம்பு முழுக்க
புள்ளி இருக்கும்..ஆனா
கண்ணு குட்டி உடம்பு முழுக்க
கண்ணு இருக்குமா?
ஜுர மாத்திரை சாப்பிட்டா
ஜுரம் போயிடுது…
தலைவலி மாத்திரை சாப்பிட்டா
தலைவலி போயிடுது…
பேதி மாத்திரை சாப்பிட்டா
பேதி போயிடுது…
ஆனா…
தூக்க மாத்திரை சாப்பிட்டா
ஏன் தூக்கம் போகமாட்டங்குது?
பல் வலின்னு வரவங்களோட பல்ல
டாக்டர் புடுங்கலாம்
ஆனா..கண் வலின்னு வரவங்களோட
கண்ண டாக்டர் புடுங்கலாமா?
கோழி போட்ட முட்டையிலிருந்து
இன்னொரு கோழி வரும்..ஆனா
வாத்தியார் போட்ட
முட்டையிலிருந்து இன்னொரு
வாத்தியார் வருவாரா?
நாம மத்தவங்களுக்கு
உதவத்தான் பிறந்து இருக்கோம்
சரி … அப்ப மத்தவங்க எதுக்குப்
பிறந்து இருக்காங்க?
இரத்த வங்கிக்குப் போனா
இரத்தம் வாங்கலாம்….ஆனா
இந்தியன் வங்கிக்குப் போனா
இந்தியா வாங்க முடியுமா
Cycle ஓட்டினா அது Cyclining
அப்படின்னா…Train ஓட்டினா அது
training-ஆ?

புஷ்ஷிக்கும் குரங்குக்கும் இடையிலான 20 ஒற்றுமைகள்......

bush1

நீ என்றாவது என்னை சந்தித்தால் அழுதுவிடாதே.....

crying-girl

கனவுகள் சுமந்து பறந்த பட்டாம்பூச்சி ஒன்று தன் சிறகுகளை இழந்து மெளனமாய் இன்று மனசுக்குள் அழுவது என் செவியில் விழுகிறதே…….. !!! என் உயிரெல்லாம் பூக்கள் மலர கவிதைகள் எழுதிய ஜீவன் இன்று ஜன்னல் வழியே தூரத்து வானின் வெள்ளி நிலவிடம் பேசி மறுமொழி பேச ஆளில்லாமல் தனித்து துடிக்கிறதே….. !! உன் இதயத்தின் விசும்பல்கள் என் இதயம் அறியும்….! என் இதயத்தின் தவிப்புகளை உன் இதயம் அறியும்….! என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே உன் பிரிவை சுமக்கின்ற என் மெல்லிய இதயம் உன் கண்ணீரின் கனம் தாங்காமல் உடைந்துவிடக்கூடும்

காதலர் தினம்........

lovers1

எனக்கும் உனக்கும்
காதல்
பிறந்த தினம்
காதலர் தினம்

valentines
நான் நீயாகவும்
நீ நானாகவும்
பிறந்த தினம்
காதலர் தினம்
valentines1
நமது விழிகள்
காதல் பிரசவம்
செய்த தினம்
காதலர் தினம்

இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த மைக்ரோ பிராசசர்கள்........

intel_chipகம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.

1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.

1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.

1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.

1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.

1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.

1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.

1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.

1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.

1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.

2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.

2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.

2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.

2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.

2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.

2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.

2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.

2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.

2009: The Core i7 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.

பாலிவுட் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள்..........

1.அமீர் கான்

aamir

2.ஐஸ்வர்யாராய்

aishwarya

3.ஷாருக் கான்

shahrukh

4.சஞ்சய் தத்

sanjay

5.அக்சய் குமார்

akshay

6.கரீனா கபூர்

kareena

7.கஜோல்

kajol

8.கரிஷ்மா

karishma

9.ராணி முகர்ஜி

rani

10.அபிஷேக் பச்சன்

abhishek

11.ஹிரித்திக் ரோஷன்

hrithik

காதல் கணிப்புக்களா??? உண்மையா?

நாம என்ன தான் பகுத்தறிவு வாதியாக இருக்க விரும்பினாலும் சில விடயங்களில் பகுத்தறிவை நான் கழற்றி வைப்பதுண்டு.
என்னைப் பற்றி சோதிடர் ஒருவர் அக்குவேறு ஆணிவேறாக தகவல்களை தெரிவித்ததால் சோதிடத்தின் மீது ஒரு சிறிய பற்று.
நம்ம காதல் நிலைமை (ஏதாவது கிடைக்குமா எண்டு தான்) எல்லாம் எப்படி இருக்கு எண்டு தேடிற்று இருந்த போதுதான் எனக்கு ஒரு வலைப்பக்க முகவரி கிடைத்தது. அற்புதமான வலைத்தளம்.
சில விடயங்களில் நம்மை மீறிய சக்திகளும் இருக்கின்றன என்பதற்கு அற்புதமான உதாரணம் தான் இந்த வலைத்தளம்.
நீங்களும் ஒருமுறை போய்ப் பாருங்களேன்...
 

Monday, June 1, 2009

காதல் பற்றிய பொன்மொழிகளை இங்கு தொகுத்து உள்ளேன்.........


விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்:
அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.

-வில்லியம் தாக்கரே.
---------------
இன்பத்தின் இனியதும்
துன்பத்தின் கொடியதும்
காதலே.

-பெய்லி
-------------
காதலிக்காமலே இருப்பதை விட,
காதலித்து தோல்வி காண்பதே மேல்.

-டென்னிசன்
-----------
சூரியன் மறையலாம்;
ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.

-ஊட்
-----------
உண்மை காதல் அனைத்துக்கும்
பரஸ்பர மதிப்பே அடிப்படை.

-ஜார்ஜ்
-----------
காதலே, காதலின் வெகுமதி.

-ஜான் டிரைடன்.
-----------
காதல் - தன்னைத் தானே அளிப்பது;
விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.

-லாங்பெல்லோ.
----------
காதல் பேச முற்பட்டு விட்டால்,
ஊமை கூட புரிந்து கொள்வான்.

-ஸ்லிப்ட்
-------
உண்மையான காதல்,
எண்ணத்திலே மலர்ந்து
உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.

-கர்னிலியஸ் நீல்.
------------
உலகை வலம் வரவும்,
சுற்றி வரவும் செய்வது காதல்.

-மார்லோ
-----------
ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்;
பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.

-பைரன்
--------------
காதல் ஒரு கண்ணாடி குவளை;
இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்;
மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.

-ஜெரோம்.
-------------
உண்மையான காதல்
ஒரு தணியாத வேட்கை,
இனிமையான தொடர்கதை,
அணையா தீ.

- ஆபின்டன்
----------
காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல.
அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது;
எப்பொழுதுமே வாடாத மலர் அது.

-லோவில்
--------------
யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை
நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.

-கதே.
-----------
அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல்.

-சார்லஸ் டிப்டின்.
------------
தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.

-கேபிள்
---------
போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்.

-ஹெர்பர்ட்.

காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.

- ஜார்ஜ் ஹெர்பர்ட்
----------------
சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.

- காத்தரின் ஹெப்பர்ன்
---------------------
காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.

- பிரயன் வாங்
-------------
ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

- டி.ஹெச். லாரன்ஸ்
------------------
காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

- ஆம்புரோஸ் பியர்ஸ்
---------------
காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.

- ஜூல் ரெனா
-----------------------
காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.
- டக்ளஸ் யேட்ஸ்
--------------------
காதல் காலத்தை மறக்கச் செய்யும்.
காலம் காதலை மறக்கச் செய்யும்.

- யாரோ
---------------------
கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.

- யாரோ
-------------
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.

-யாரோ
--------------------------


காதல் பற்றிய பொன்மொழிகளை இங்கு தொகுத்து உள்ளேன்.


எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லப்பா....:Inlove::Inlove::Inlove:

உண்மையான காதல் என்பது............


"காதல் என்பது ஒருவரின் இளமைகாலத்தில் வரக்கூடிய இனிமையான அனுபவம்" என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ "கல்யாணத்தின் பின்னர் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்புதான் உண்மையான காதல், அதுவும் கருத்தொருமித்த குடும்ப வாழ்வில் இருந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முதுமை நிலையில் இருக்க கூடிய காதலே உண்மையான, முழுமையான காதல்" என்கிறார்கள்.

"காதலுக்கு கண்ணில்லை, காதல் வரை முறையற்றது, எவராலும் காதலை கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும் யார் மேலும் காதல் வரலாம்" என்கிறார்கள் சிலர். "அது எல்லாம் வெற்றுப்பேச்சு, அப்படி வருவது எல்லாம் வெறும் ஒருவர்மேல் ஒருவருக்கு வரும் ஈர்ப்பு மட்டுமே, அதை காதல் என்ற பெயாரால் நாகரீகப்படுத்தி சொல்கிறார்கள்" என்கிறார்கள் வேறு சிலர்.

"கண்ணில்லாத காதலால் குடும்பம், சமூகத்தில் பிரச்சனைகளே உருவாகும், அந்த காதல் உணர்ச்சிபூர்வமாய் இருக்காமல், அறிவு பூர்வமாய் சிந்திக்கப்பட்டு வந்தால் அது குடும்பம், சமூகத்திற்கு நன்மை தரும்" என்பது ஒரு சாராரின் வாதம். "அப்படியா, அறிவுபூர்வமாய் இருப்பது காதலே அல்ல, அது வெறும் கடமை மட்டுமே" என்பது எதிர் தரப்பினரின் வாதம். "கண்ணில்லாது ஏற்படும் காதல் என்பது வாழ்வில் பலருக்கு துன்பத்தில் முடிகிறது. அமரத்துவம் பெற்றதாய் பேசப்படும் காதல்கள் எல்லாம் துன்பத்தில் முடிந்தவையே. அப்படி இருக்கையில், வெறும் உணர்ச்சியினால் ஏற்பட்ட அப்படிப்பட்ட காதலால், தனி மனிதனுக்கோ, அல்லது சமுதாயத்துக்கோ என்ன பலன்" என்று மற்றவர்கள் சண்டைக்கு வருகிறார்கள்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க, "காதல் என்பது புனிதமான ஒன்று, அது உணர்வு சம்பத்தப்பட்டது மட்டுமே, உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமே கிடையாது" என்பவர்கள் ஒருபுறமும், "அப்படிப்பட்ட ஒன்று காதலே அல்ல, உடலும், உணர்வும் இணைந்து வருவதே காதல்" என்பவர்கள் ஒரு புறமுமாய் வாதிட்டு கொள்கிறார்கள்.

இப்படி பல முரண்பாடுகளுடன் பேசப்படும் காதல்பற்றி நிச்சயம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்களை முடிந்தால் இந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யுங்களேன்.

கோவை ரமேஷ் விபத்தில் பலி......


விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு மூலம் அறிமுகமாகி, சன் டிவியின் அசத்தப் போவது யாரு மூலம் பிரபலமான கோவையைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் கோவை ரமேஷ் சாலை விபத்தில் பலியானார்.

கோவை ஒப்பணக்காரவீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (40). கோவை ரமேஷ் என்ற பெயரில் சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். முன்பு விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் இவர்.

பெரும்பாலும் பெண் வேடத்தில்தான் இவர் வருவார். பல்வேறு பிரபல நடிகைகளின் குரலில் பேசுவது இவரது திறமை. குறிப்பாக சரோஜாதேவியைப் போலவே சிறப்பாக பேசி அனைவரையும் கவர்ந்தவர் ரமேஷ்.

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்ற மோகன்குமார் (30). இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

கோவை ரமேஷ் தனக்குக் கிடைத்த புகழின் மூலம் பல்வேறு இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில், அவரும், மோகன் குமாரும், திருவாரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு ரமேஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் அசோக் ஆகியோர் காரில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

திருச்சி வந்ததும் காரில் இருந்து அசோக் இறங்கி விட்டார். பின்னர் ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் கோவை நோக்கி வந்தனர்.

நேற்று காலை 6 மணி அளவில் அவர்கள் காங்கேயம்-முத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, திடீரென்று கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் உடல் நசுங்கி இறந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி இறந்த கோவை ரமேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உடல்களை போலீஸார் மீட்டனர்.

லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மேதைகள் வெளிப்படுத்திய கருத்துக்கள்

நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டுங்கள். ஆனால் தேர்ந்தெடுத்த நண்பனை மாற்றும் முன்பு இன்னும் அதிகம் நிதானம் காட்டுங்கள்.
-பெஞ்சமின் பிராங்ளின்.

மனிதனை விட சூழ்நிலை வலிமை மிக்கது.
-நேரு.

நண்பனுக்கு கடன் கொடுத்தால் நண்பனுக்கு நண்பனும் போய்விடுவான், கடனுக்கு கடனும் போய்விடும்.
-ஷேக்ஷ்பியர்.

உன் வெற்றிகளை எண்ணிப் பார்க்காதே...
தோல்விகளை மட்டும் எண்ணிக் கொள்...
ஏனென்றால் உன் வெற்றிகளை விட உன் தோல்விகள் பெறுமதி வாய்ந்தவை.
-ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

நீயென் பக்கம் இருப்பாயா ?


வானும் புவியும்
முத்தமிடும் இடத்திற்கு
இருவரும் சேர்ந்தே போவோமா ?
மனிதர் சத்தம் இல்லா இடத்தில்
நீயென் பக்கம் இருப்பாயா ?


காதல் (என்னுள்) பெருக
கண்கள் (உன்னை) பருக
மனதோ (கொஞ்சம்) கிறங்க
அன்பே (அருகில்) வருக !

வில்லியம் சேக்சுபியர்

வில்லியம் ஷேக்ஸ்பியர்

வில்லியம் சேக்சுபியர் (ஏப்ரல் 26, 1564 - ஏப்ரல் 23, 1616 - திகதிகள் ஜூலியான் நாட்காட்டிப்படி) ஆங்கில நாடக எழுத்தாளரும், கவிதையாசிரியரும் ஆவார். ஆங்கில இலக்கிய உலகில் ஓர் சிறந்த நாடக ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் போற்றப்படுகின்றார். இவர் 38 நாடங்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் புகழானது இவரின் இறப்பின் பின்னர் அதிகரித்தது.

இவரது பங்களிப்பின் காலத்தை அறுதியிட்டுக் கூறமுடியாதெனினும் அநேகமான ஆக்கங்கள் 1586 இற்கும் 1616 இற்குமிடையிலான காலப் பகுதியிலேயே நிகழ்ந்தது. நகைச்சுவை நாடகங்களையும், துன்பியல் நாடகங்களையும் வழங்கியவர்களில் இவர் மிகச்சிறந்தவராக விளங்கினார்

சேச்சுபியரின் இலக்கிய ஆக்கங்கள் பரவலாக வழக்கில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாடகங்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நடித்துக் காட்டப் படுகின்றன.

ஐஸ்வர்யா பச்சன் சம்பாதிப்பது ஒரு பில்லியன் டாலர்.....










விளம்பரம் மூலம் மட்டும் ஒரு வருடத்திற்கு ஐஸ்வர்யா பச்சன் சம்பாதிப்பது ஒரு பில்லியன் டாலர்.....


கோக்க-கோலா, நட்சத்திரா வைரம் ஆகியவற்றிற்கு மட்டும் அல்லாது சுவிஸ் வாட்ச், இண்டர்நேஷனல் லக்ஸ் சோப், லோ'ஒரல் என்ற கம்பெனிக்கும் 2003லிருந்து அம்பாசிடராக இருக்கிறார்.


சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வாங்கி உள்ளார்.
அமிதாப் பச்சன், டெண்டுல்கர் போல் அதிகமாக இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்த டாப் 10 மனிதர்களில் ஒரே பெண் ஐஸ் மட்டுமே.


நீங்கள் இறக்கும் திகதியை அறிந்து கொள்ள வேண்டுமா?

இங்கே அழுத்தவும்

காதலைப் பற்றி மேதைகள் வெளிப்படுத்திய கருத்துக்கள்

மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்
பொழுது மாறாதிருப்பதுதான் காதல்
                   ஷேக்ஸ்பியர்

என்றும் மாறாத காதல்
பார்த்ததும் வருவதில்லை!
     கிறிஸ்டோர் மார்லோவ்

காதல் பேய் மாதிரி.எல்லாரும் அதைப் பற்றிப்
பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.
                    லே ரோச்சிஃபோகால்ட்

நம்மை இன்னொருவரிடம்
கண்டுபிடிப்பதுதான் காதல்.
      அலெக்ஸாண்டர் ஸ்மித்

காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை;
அந்தக் காரணம்தான் தெரிவதில்லை.
         பாஸ்கல்

மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்ல காதல்;
           இணைகின்ற இருவருக்கும் இந்த உலகம்
                    ஒன்றாகத் தெரிந்தால்தான் காதல்!
            செயிண்ட் எக்ஸ்யூபெரி

கடுகளவு நம்பிக்கையே
காதல் பிறப்பதற்குப் போதுமானது!
ஸ்டெந்தால்

காதல் எங்கு இருக்கிறதோ
அங்குதான் வாழ்க்கை இருக்கிறது
      மகாத்மா காந்தி

காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை; தங்கள்
காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால்
இருக்கலாம்.
                          ஷேக்ஸ்பியர்

காதல் வந்ததால்


உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட‌
கவிதை ஆனதே.
அடடா,
இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!

காதல் உன்னைச் சேரும்…

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!