Friday, December 9, 2011

என் காதல்....

உன்னை நிஜத்தை  வெறுக்க நினைத்து விலகும் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகில் இருந்த நினைவை என்னை மறந்து விரும்புறேன்
தொட்டு விடும் தூரத்தில் நிலவது இருப்பதில்லை -அதுவறிந்து 
அதன் வரவின்றி மல்லிகையவள் மலரமறுப்பதில்லை 
தொட்டு விடும் தூரத்தில் என் காதல் தான் -இருந்தும்
தொட்டு விடும் நிலைமையில் என் நிலை தான் இல்லை
தொட்டு விடும் தூரத்தில் நீ இருந்தும் -என் காதல் 
ஒட்டாத காந்தம் போல் தள்ளுதடி.. 

பூக்காத பூவது இறைவனடி சேர்வதில்லை-இதுவறிந்தும்
பூக்காத பூவாக்கின்றேன் என்கதலை.. 
கண்ணிரண்டு உறவாட மனமிரண்டு நினைவாட -காதலது 
உள்ளத்தில் வந்துவிடும் வலி ஒன்று தந்துவிடும் .
சொந்தங்கள் பந்தாட தகுதியது நின்றாட -என் மனவலியது 
கொன்றாட உன் மண நாளது வந்துவிடும் 
காணாத இறைவனிடம் ஒருவாரம் கேட்கின்றேன்-என்னவள் 
இதயத்தில் ஓரறையில் என் கல்லறை அமையவேண்டும்....... 

Tuesday, November 22, 2011

இது திட்டம் போட்டு செய்த செயலுமல்ல..............




என்னை கவர்ந்த பாடல் வரிகள் என்கற்பனையில் சில மாற்றங்களுடன்...


பூங்கொடியில் ஒரு பூவைக் கண்டேன் 
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்- கொலை 
செய்ததாய் கொடி புலம்புவதோ...
பால் குடத்தில் ஒரு எறும்பு விழ 
பல்லி என்று அதை வெறுப்பது போல்
என்மனதில் சிறு ஆசை எழ 
துரோகம் என என்னை வேறுப்பதென்ன,,,,,,,,,,.
நதி வளையும் வழி தெரிவதுண்டு -விதி வழி தெரிவதில்லை 
தெரிந்துகொண்டால் அதி ருசியும் இல்லை....
இது திட்டம் போட்டு செய்த செயலுமல்ல..............
உன் மனதை நோகடிக்கும் செயலுமல்ல......
விரும்புதல் உன் உலகில் துரோகம் என்றால்...
உன் வாழ்வில் நானும் துரோகியடி........
கண்ணீர் என்னை தண்டிக்குமா -நாளை 
காலங்கள் என்ன மன்னிக்குமா..

Saturday, October 1, 2011

சுகம் காணும் என்சோகம்...

அண்மையில் லங்காஸ்ரீ கவிதை பக்கத்தில் உறுப்பினறாக இணைத்து கொண்டேன். அதற்கு சமர்பிப்பதக்காக நான் வடித்த கிறுக்கல் உங்கள் ரசனைக்கு .....


கல் உருவில் தெய்வங்கள் பலவுண்டு இவ்வுலகில்- என்சோகம் 
துடைத்திட ஒன்றும் இல்லை என்னருகில் 

உன் உரு கண்டேன் என் உடல் மனம் இழைத்தேன் 
உன் வாய் மொழியை என் தாய்மொழி என்றேன்.
உன் நகம் தீண்டி என் அகம் மகிழ்ந்தேன் அன்று- இன்று 
என் மனம் சீண்டி புறம் விட்டு சென்றாய்....
உன் நிழல் என்னுடன் உன் நினைவு என் நெஞ்ச்சுடன்
சுகம் காணும் என்சோகம் என்றும் உன் நினைவுடன் .....





Sunday, September 25, 2011

மொனம்.......

இதயத்தை ரணமாக்கும் உன் வார்த்தைகளை விட 
என்னை சாகடிக்கும் உன் மொனத்திற்கே வலி அதிகம்
இதை அறிந்தும் அறியாமல் நீ...
இது வலித்தும் வலிக்காதவனாய் நான்!!!!!!!!!!!  

Wednesday, August 31, 2011

இது உனக்கேன் புரியவில்லை.....

சிறகு நீங்கினால் பறவை இல்லை...
உடலை நீங்கினால் உயிரும் இல்லை
உன்னை நீங்கினால் நானும் இல்லை
இது உனக்கேன் புரியவில்லை.....

Thursday, April 7, 2011

hi

My First Snow Experience Slideshow: Buveraj’s trip to London, England, United Kingdom was created by TripAdvisor. See another London slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

Wednesday, April 6, 2011

Tuesday, April 5, 2011

இரு நாட்டு ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் .........



நாங்க ஒண்டும் பட்சோந்தி ரசிகர்கள் இல்ல , மேட்ச் வின் பண்ணினா கோவில் கட்டுறதும் தோத்த அதே கொவில இடிகிறதுகும். எப்பவும் நாங்க எங்கட நாட்டு கிரிக்கெட்ட நெசிக்கிரனாங்க...1st ரௌண்டோட வந்தாலும் , வின்னேர்ஸ் ஆனாலும் நாங்க எப்பவும் ஒரே மாதிரித்தான் . கொஞ்சம் யோசிச்சு பாருங்க இப்ப இவங்கள தலயில வெச்சி கொண்டாடுற ரசிகர்களும் , ஊடகங்களும் 2007 என்ன செய்தவங்க எண்டு , செருப்பால மட்டும் தான் அடிகல.அதுவும் அவங்கட போடோக்களுக்கு அடிச்சவங்க தான்.... ஏன் 2003 finalla இவங்க தோத்த போதும் இதே நிலைமை தான் ....இந்த டீம் கேப்டன் கூட இத ஒத்து கொண்டிருக்கான் . 'நாங்க தோத்திருந்தா எங்கட வீடு இப்பே எரிஞ்சு கொண்டிருக்கும் எண்டு அவனே ஒத்துக்கொண்டிருக்கான் .... இதே நிலைமை எங்களுக்கும் நடந்தது ...... 1999 1st ரௌண்டோட எங்கட டீம் வந்த போது எங்கட கேப்டன் ஒண்டு சொன்னார் 'எங்கட மக்கள் எங்கள பற்றி நல்லா புரிஞ்சி இருக்காங்க .அவங்களுக்கு எங்கள பற்றி தெரியும் .இந்த முடிவ அவங்க ஏற்று கொள்ளுவாங்க' எண்டு சொன்னார் . இந்த 2 கருத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு எண்டு விளங்குதா ..... இது தான் இரு நாட்டு ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் .........

Saturday, April 2, 2011

world cup final..........enjoy

Thursday, February 17, 2011