
எழுதுகிறேன் ஒரு கவி
எனக்காக அல்ல !!!
உன்னால் என் மனதில்
ஏற்ப்பட்ட காயத்தை சுட்டிட...
உன்னை நினைத்த அந்நாளில்
உள்ளத்தை தொலைத்தேன்
அன்பு கொண்ட இதயத்தினை பணம் மறுக்கும்
என்பதை உணர்ந்து கொண்டேன்!!!
இந்த ஏழைக்கு எட்டாது என்று
என் மனதை மாற்றிட முயன்றேன்
ஆனால் இதயமோ அடம்பிடிக்கிறது
உன்னால் என்றுமே மறைந்து போகா
வடுக்கல் என்னைச் சூழ...
உயிரான அன்பு உருக்குலைந்தாலும்
என் உயிர் வாழும் வரை உன் நினைவுகள்
உள்ளதை விட்டகலாது!!!!
மறு ஜென்மம் மானிடராய்...
செல்வத்துடன்
பிறந்து விட்டால்
உன் அன்பை
பணம் கொடுத்து வாங்குவேன்.!!!
No comments:
Post a Comment