Monday, June 1, 2009

காதலைப் பற்றி மேதைகள் வெளிப்படுத்திய கருத்துக்கள்

மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்
பொழுது மாறாதிருப்பதுதான் காதல்
                   ஷேக்ஸ்பியர்

என்றும் மாறாத காதல்
பார்த்ததும் வருவதில்லை!
     கிறிஸ்டோர் மார்லோவ்

காதல் பேய் மாதிரி.எல்லாரும் அதைப் பற்றிப்
பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.
                    லே ரோச்சிஃபோகால்ட்

நம்மை இன்னொருவரிடம்
கண்டுபிடிப்பதுதான் காதல்.
      அலெக்ஸாண்டர் ஸ்மித்

காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை;
அந்தக் காரணம்தான் தெரிவதில்லை.
         பாஸ்கல்

மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்ல காதல்;
           இணைகின்ற இருவருக்கும் இந்த உலகம்
                    ஒன்றாகத் தெரிந்தால்தான் காதல்!
            செயிண்ட் எக்ஸ்யூபெரி

கடுகளவு நம்பிக்கையே
காதல் பிறப்பதற்குப் போதுமானது!
ஸ்டெந்தால்

காதல் எங்கு இருக்கிறதோ
அங்குதான் வாழ்க்கை இருக்கிறது
      மகாத்மா காந்தி

காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை; தங்கள்
காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால்
இருக்கலாம்.
                          ஷேக்ஸ்பியர்

No comments:

Post a Comment