Tuesday, June 9, 2009

நீ முத்தமிட்ட சத்தம் என்னில்........


நீ முத்தமிட்ட சத்தம் என்னில்
…….. உன் காதல் சொல்லி தாலாட்டுது
உன் இமைகள் இரண்டும் பறந்து
…….. தூதாய் வந்து காதல் சொல்லுது
உன் வதனம் பேசும் பாஷை
…….. என்னெஞ்சில் இன்பத்தீயை மூட்டுது
நீ தொட்டு பேசும் போது
…….. என் நெஞ்சில் பூக்கள் மலர்கிறது.

நீ கொஞ்சி பேசி சிரித்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ கோவம் கொண்டு சிவந்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ எங்கோ நடந்து செல்கையில்
…….. என் பாதை ஆகிறாய்
நீ அமரும் வேளையில்
…….. எனை பக்தனாய் சுற்றச்செய்கிறாய்

சண்டைசெய்யும் போது அதிர்ந்து
…….. உதிராத உன் வார்த்தை
மண்டைகுடைந்து என்னுள்
…….. எரிமலை தாக்கத்தைக் கொடுக்கின்றது
உன் மவுனவிசும்பலின் சோகம்
…….. கூர்கொண்ட உழியாய் மாறி
என் மன இருக்கத்தை
…….. உடைத்து தூள்தூளாய் சிதைக்கின்றது.

உன் மவுனத்தின் பாஷை கொடிது
வன்மமின்றி வன்முறை செய்யுது கடிது
என் நெஞ்சம் எப்படி தாங்குமதை நெடிது
நன்றாய் உணர்ந்ததால் சிரிக்கின்றாய் சிரிது.

நாட்கள் நகரும் போது
…….. இலைகள் சருகாய் மாறும்
என்ன விந்தை செய்தாய் என்னுள்
…….. புதுத்தளிராய் துளிர்க்கின்றாய்
மலர்ந்த பூவின் வாசம்
…….. நாளும் குறைந்தே தேயும்
மர்மமென்ன சொல்வாய் நாளும்
…….. புதுமலராய் வாசம் வீசுகின்றாய்.

 என்னில்
…….. உன் காதல் சொல்லி தாலாட்டுது
உன் இமைகள் இரண்டும் பறந்து
…….. தூதாய் வந்து காதல் சொல்லுது
உன் வதனம் பேசும் பாஷை
…….. என்னெஞ்சில் இன்பத்தீயை மூட்டுது
நீ தொட்டு பேசும் போது
…….. என் நெஞ்சில் பூக்கள் மலர்கிறது.

நீ கொஞ்சி பேசி சிரித்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ கோவம் கொண்டு சிவந்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ எங்கோ நடந்து செல்கையில்
…….. என் பாதை ஆகிறாய்
நீ அமரும் வேளையில்
…….. எனை பக்தனாய் சுற்றச்செய்கிறாய்

சண்டைசெய்யும் போது அதிர்ந்து
…….. உதிராத உன் வார்த்தை
மண்டைகுடைந்து என்னுள்
…….. எரிமலை தாக்கத்தைக் கொடுக்கின்றது
உன் மவுனவிசும்பலின் சோகம்
…….. கூர்கொண்ட உழியாய் மாறி
என் மன இருக்கத்தை
…….. உடைத்து தூள்தூளாய் சிதைக்கின்றது.

உன் மவுனத்தின் பாஷை கொடிது
வன்மமின்றி வன்முறை செய்யுது கடிது
என் நெஞ்சம் எப்படி தாங்குமதை நெடிது
நன்றாய் உணர்ந்ததால் சிரிக்கின்றாய் சிரிது.

நாட்கள் நகரும் போது
…….. இலைகள் சருகாய் மாறும்
என்ன விந்தை செய்தாய் என்னுள்
…….. புதுத்தளிராய் துளிர்க்கின்றாய்
மலர்ந்த பூவின் வாசம்
…….. நாளும் குறைந்தே தேயும்
மர்மமென்ன சொல்வாய் நாளும்
…….. புதுமலராய் வாசம் வீசுகின்றாய்.

No comments:

Post a Comment