Friday, May 29, 2009

கள்ளப் பார்வையில்.........


புன்னகைத்து
விட்டுச்சென்ற
உன் ஞாபகத்தின்
சுவடுகளின் சூடு
இன்னமும் என்
இதயக்கூட்டிலே
ஏங்கிக்கிடக்கின்றது!

எத்தி நின்று
கள்ளப் பார்வையினில்
என் உயிர் வேர்களை
உன்னிடம் நோக்கியே
பயணிக்க செய்கிறது
உந்தன் கன்னக்குழிகள்!

சேய் விட்டு பிரியும்
தாயினை கை நீட்டி
அழைத்து ,பின் தொடரும்
பிஞ்சு கால்கள் போல!

No comments:

Post a Comment