Friday, May 29, 2009

நான் சுவாசிப்பது இன்றே கடைசி...........

நீ மிச்சம்
விட்டு சென்ற
அந்த ரோஜாவுடன்
ஒற்றையாக நான்
அதே நதிக்கரையில்
இன்றும் காத்துக்கிடக்கின்றேன்.

போர்முனையில்
புதைந்துப் போனதாக
ஊர் பேசுகின்றது.
உண்மைதானா?
நீ என்னுள் வாழ்வதாக
சொன்னது,சிருங்காரா?

உன் இதழ் பதித்து
பூவின் இதழில் இட்ட
முத்தத்தின் வாசம்
கரையெல்லம், நீ என்றே
பரவிக்கிடக்கின்றது.

மீண்டும் வருவதாய் இருந்தால்
இன்றே வந்துவிடு.

மனிக்கட்டு நரம்புகள்
அறுபட்டு,  நதிக்கரையெல்லாம்
குருதியின் வாசம்.

நான் சுவாசிப்பது
இன்றே கடைசி.

No comments:

Post a Comment