

பதிவு பதிய வருகிறேன் புதிது புதிதா தருகிறேன் வாருங்கள் வந்து பாருங்கள் தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....
நீ முத்தமிட்ட சத்தம் என்னில்
…….. உன் காதல் சொல்லி தாலாட்டுது
உன் இமைகள் இரண்டும் பறந்து
…….. தூதாய் வந்து காதல் சொல்லுது
உன் வதனம் பேசும் பாஷை
…….. என்னெஞ்சில் இன்பத்தீயை மூட்டுது
நீ தொட்டு பேசும் போது
…….. என் நெஞ்சில் பூக்கள் மலர்கிறது.
நீ கொஞ்சி பேசி சிரித்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ கோவம் கொண்டு சிவந்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ எங்கோ நடந்து செல்கையில்
…….. என் பாதை ஆகிறாய்
நீ அமரும் வேளையில்
…….. எனை பக்தனாய் சுற்றச்செய்கிறாய்
சண்டைசெய்யும் போது அதிர்ந்து
…….. உதிராத உன் வார்த்தை
மண்டைகுடைந்து என்னுள்
…….. எரிமலை தாக்கத்தைக் கொடுக்கின்றது
உன் மவுனவிசும்பலின் சோகம்
…….. கூர்கொண்ட உழியாய் மாறி
என் மன இருக்கத்தை
…….. உடைத்து தூள்தூளாய் சிதைக்கின்றது.
உன் மவுனத்தின் பாஷை கொடிது
வன்மமின்றி வன்முறை செய்யுது கடிது
என் நெஞ்சம் எப்படி தாங்குமதை நெடிது
நன்றாய் உணர்ந்ததால் சிரிக்கின்றாய் சிரிது.
நாட்கள் நகரும் போது
…….. இலைகள் சருகாய் மாறும்
என்ன விந்தை செய்தாய் என்னுள்
…….. புதுத்தளிராய் துளிர்க்கின்றாய்
மலர்ந்த பூவின் வாசம்
…….. நாளும் குறைந்தே தேயும்
மர்மமென்ன சொல்வாய் நாளும்
…….. புதுமலராய் வாசம் வீசுகின்றாய்.
நீ கொஞ்சி பேசி சிரித்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ கோவம் கொண்டு சிவந்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ எங்கோ நடந்து செல்கையில்
…….. என் பாதை ஆகிறாய்
நீ அமரும் வேளையில்
…….. எனை பக்தனாய் சுற்றச்செய்கிறாய்
சண்டைசெய்யும் போது அதிர்ந்து
…….. உதிராத உன் வார்த்தை
மண்டைகுடைந்து என்னுள்
…….. எரிமலை தாக்கத்தைக் கொடுக்கின்றது
உன் மவுனவிசும்பலின் சோகம்
…….. கூர்கொண்ட உழியாய் மாறி
என் மன இருக்கத்தை
…….. உடைத்து தூள்தூளாய் சிதைக்கின்றது.
உன் மவுனத்தின் பாஷை கொடிது
வன்மமின்றி வன்முறை செய்யுது கடிது
என் நெஞ்சம் எப்படி தாங்குமதை நெடிது
நன்றாய் உணர்ந்ததால் சிரிக்கின்றாய் சிரிது.
நாட்கள் நகரும் போது
…….. இலைகள் சருகாய் மாறும்
என்ன விந்தை செய்தாய் என்னுள்
…….. புதுத்தளிராய் துளிர்க்கின்றாய்
மலர்ந்த பூவின் வாசம்
…….. நாளும் குறைந்தே தேயும்
மர்மமென்ன சொல்வாய் நாளும்
…….. புதுமலராய் வாசம் வீசுகின்றாய்.
கனவுகள் சுமந்து பறந்த பட்டாம்பூச்சி ஒன்று தன் சிறகுகளை இழந்து மெளனமாய் இன்று மனசுக்குள் அழுவது என் செவியில் விழுகிறதே…….. !!! என் உயிரெல்லாம் பூக்கள் மலர கவிதைகள் எழுதிய ஜீவன் இன்று ஜன்னல் வழியே தூரத்து வானின் வெள்ளி நிலவிடம் பேசி மறுமொழி பேச ஆளில்லாமல் தனித்து துடிக்கிறதே….. !! உன் இதயத்தின் விசும்பல்கள் என் இதயம் அறியும்….! என் இதயத்தின் தவிப்புகளை உன் இதயம் அறியும்….! என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே உன் பிரிவை சுமக்கின்ற என் மெல்லிய இதயம் உன் கண்ணீரின் கனம் தாங்காமல் உடைந்துவிடக்கூடும்
எனக்கும் உனக்கும்
காதல்
பிறந்த தினம்
காதலர் தினம்
கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.
1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.
1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.
1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.
1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.
1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.
1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.
1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.
1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.
1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.
2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.
2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.
2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.
2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.
2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.
2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.
2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.
2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.
2009: The Core i7 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.
வில்லியம் சேக்சுபியர் (ஏப்ரல் 26, 1564 - ஏப்ரல் 23, 1616 - திகதிகள் ஜூலியான் நாட்காட்டிப்படி) ஆங்கில நாடக எழுத்தாளரும், கவிதையாசிரியரும் ஆவார். ஆங்கில இலக்கிய உலகில் ஓர் சிறந்த நாடக ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் போற்றப்படுகின்றார். இவர் 38 நாடங்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் புகழானது இவரின் இறப்பின் பின்னர் அதிகரித்தது.
இவரது பங்களிப்பின் காலத்தை அறுதியிட்டுக் கூறமுடியாதெனினும் அநேகமான ஆக்கங்கள் 1586 இற்கும் 1616 இற்குமிடையிலான காலப் பகுதியிலேயே நிகழ்ந்தது. நகைச்சுவை நாடகங்களையும், துன்பியல் நாடகங்களையும் வழங்கியவர்களில் இவர் மிகச்சிறந்தவராக விளங்கினார்
சேச்சுபியரின் இலக்கிய ஆக்கங்கள் பரவலாக வழக்கில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாடகங்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நடித்துக் காட்டப் படுகின்றன.
மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்
பொழுது மாறாதிருப்பதுதான் காதல்
ஷேக்ஸ்பியர்
என்றும் மாறாத காதல்
பார்த்ததும் வருவதில்லை!
கிறிஸ்டோர் மார்லோவ்
காதல் பேய் மாதிரி.எல்லாரும் அதைப் பற்றிப்
பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.
லே ரோச்சிஃபோகால்ட்
நம்மை இன்னொருவரிடம்
கண்டுபிடிப்பதுதான் காதல்.
அலெக்ஸாண்டர் ஸ்மித்
காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை;
அந்தக் காரணம்தான் தெரிவதில்லை.
பாஸ்கல்
மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்ல காதல்;
இணைகின்ற இருவருக்கும் இந்த உலகம்
ஒன்றாகத் தெரிந்தால்தான் காதல்!
செயிண்ட் எக்ஸ்யூபெரி
கடுகளவு நம்பிக்கையே
காதல் பிறப்பதற்குப் போதுமானது!
ஸ்டெந்தால்
காதல் எங்கு இருக்கிறதோ
அங்குதான் வாழ்க்கை இருக்கிறது
மகாத்மா காந்தி
காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை; தங்கள்
காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால்
இருக்கலாம்.
ஷேக்ஸ்பியர்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!